மக்களை பிரித்தாலும் கொள்கையில் திமுக ஈடுபட்டு வருகிறது! வேலூரில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

 மக்களை பிரித்தாலும் கொள்கையில் திமுக ஈடுபட்டு வருகிறது! வேலூரில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஜி.கே.சேகரன்,

 மக்களை பிரித்தாலும் கொள்கையில் திமுக ஈடுபட்டு வருகிறது - தமிழகம் கஞ்சா போதை பொருட்களின் பிறப்பிடமாக மாறியுள்ளது இதற்கு அரசியல் கட்சி ஒன்றும் துணை செய்கிறது மணல் கொள்ளை ரூ,4 ஆயிரம் கோடிக்கு நடந்துள்ளது பிரதமர் மோடி வேலூரில் பேச்சு. 

 வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டை மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம்  கூட்டத்தில் பங்கேற்றார். இதில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த பாஜக ,பாமக, வேட்பாளர்கள் பங்கேற்றனர்.

  இதில் வேலூர் மக்களவை தொகுதியில் பாஜக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி. சண்முகம், தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், கிருஷ்ணகிரி தொகுதி பாஜக வேட்பாளர் நரசிம்மன், அரக்கோணம்  தொகுதி பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு, ஆரணி மக்களவைத் தொகு பாமக வேட்பாளர் கணேஷ் குமா£ ,ஆகியோரை ஆதரித்து பேசினார்.

 வேட்டி சட்டையில் வந்திருந்த அவர், வணக்கம் என்று கூறி தன் உரையை துவக்கினார். வருகின்ற தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்தார். மூன்றாவது முறையாக நான் பிரதமராக பதவி ஏற்கும் பொழுது,தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டுக்காகவும் தன்னை அர்ப்பணித்து பாடுபடுவேன்.வேலூர் வீரம் நிறைந்த மண்,ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில மிகப்பெரிய புரட்சிக்கு வேலூர் வித்திட்டது.

   இந்திய புரட்சி வித்திட்ட இந்த பூமியில் மீண்டும் ஒரு புரட்சி ஏற்பட்டு மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம். பல்வேறு திட்டங்களை இந்தியா செயல்படுத்தப்பட்டு வருவதின் மூலம் இந்தியா வல்லரசாக மாறி வருகிறது.

  இந்த 21 நூற்றாண்டில் இந்தியாவை 10 ஆண்டுகளாக ஆட்சியில் வளர்ச்சி அடைந்து உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் பொருளாதாரம் பின் தங்கி இருந்த நிலையில் இப்போது பொருளாதாரம் உயர்ந்துள்ளது.அதில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது.பல்வேறு வேலை வாய்ப்பு உருவாகும், ஒரு நவீன நகரமாக வேலூர் மாறும்,

   உதான் திட்டத்தில் வேலூர் விமான நிலையம் பணிகள் விரைவில் முடிக்கப்படும். இதனால் பல நாடுகளில் இருந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். திராவிட முன்னேற்ற கழகம் பழைய சிந்தனையில் உள்ளது.பழைய அரசியலை செய்து வருகிறது.

  திமுக குடும்ப சொத்தாக மாறி உள்ளது. கொள்ளை அடிப்பதை மட்டுமே திமுக செய்து வருகிறது. இரண்டு ஆண்டுகளில் மணல் கொள்ளையில் 4000 கோடியை இழப்பு ஏற்படுத்தி உள்ளது திமுக அரசு.

  ஊழலுக்கு முன் உதாரணமாக திமுக தான் உள்ளது.  ஒட்டுமொத்த குடும்பமே ஊழல் செய்கிறார்கள்.

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் போதை பொருள் விற்கும் கூடாரமாக மாறி வருகிறது. இதன் காரணமாக சின்ன சின்ன பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கெல்லாம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

   மக்களை பிரித்தாலும் கொள்கையில் திமுக ஈடுபட்டு வருகிறது.மதம் மொழி ஜாதி ஆகியவற்றின் பெயரால் திமுக பிரித்தாலும் சூழ்ச்சியை கையாண்டு வருகிறது. தமிழகத்தின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலம் காப்பாற்ற முடியாமல் உள்ளது. காரணம் தமிழக போதை பொருட்கள் விற்பனையில் திமுக உதவியுடன் நடக்கிறது.

  இதனை நாம் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.திமுக குடும்பம்  தமிழக மக்களை மொழியின், பிராந்தியம், ஜாதி, மதம் என பிரித்து ஆளுகிறது. ஒருநாள் மக்கள் தெளிவடையும்போது மிக பெரிய தாக்கத்தை சந்திக்கும்.

 தமிழகத்தை திமுக 50 ஆண்டுகாலம் பாழ்படுத்தி வைத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மொழியில் பேச முயற்சி செய்து வருகிறேன்.உலக மொழியாக தமிழை மாற்ற முயற்சி செய்து வருகிறேன். காசியில் சௌராஷ்டிரா தமிழ் சங்கம் நடத்தி இருக்கிறேன். உலக முழுவதும் தமிழை கொண்டு செல்வேன். அதனை தடுக்கும் வகையில் திமுக செயல்படுகிறது.

  விண்வெளி துறையில், உற்பத்தி துறையில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்வதில் தமிழகம் மிகக் கடுமையாக உழைக்கிறது. தமிழகத்தில் அமைந்துள்ள ராணுவ பாதுகாப்பு உற்பத்தி மையங்கள் மூலமாக நடைபெறும் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தமிழகத்தை மிகப்பெரிய அளவில் முன்னோக்கி கொண்டு செல்லும்.

வேலூர் மக்களின் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்து என்டிஏ கூட்டணி செயல்படுகிறது.

  தமிழகம் பெண் சக்தி ஆராதிக்கின்ற மண்ணாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி இந்து மதத்தை சக்தியை அழிப்பேன் என்று தெரிவித்துள்ளார். திமுக காங்கிரஸ் கூட்டணியில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு இந்த கட்சிகள் துரோகம் செய்துள்ளது.

   நாடு முழுவது காங்கிரஸ், திமுக பொய்யான பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அனைவருக்கும் தெரியும் கச்சதீவை  தாரை வார்த்தது யார் என, மேலும் மீனவ மக்களை வஞ்சிக்கும் வகையில் காங்கிரஸ், திமுக இருக்கிறது.

 வேலூ£ மீது¢ எனக்கு தனி மரியாதை உண்டு. நான் குஜராத் முதல்வராக இருந்த போது தங்க கோவிலுக்கு வந்துள்ளேன். இந்து தர்மத்தை அழிக்கவே காங்கிரஸ், திமுக உள்ளது. பெண்களை அவமதிக்கும் கூட்டணியாக திமுகவும் காங்கிரஸ் உள்ளது. பெண்களை இழிவுபடுத்தி வருகிறார்கள்.பெண்களின் சக்தியை நாங்கள் பாதுகாப்போம் மரியாதை மீட்டு கொடுப்போம். திமுக பெண்களை இழிவுப்படுத்துபவர்களாக உள்ளனர். பெண் சக்தியை காக்கவும், அவர்களை மரியாதை நடத்தும் கட்சியாக பாஜக உள்ளது.

  வருகின்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் மானத்தை காப்பாற்றுவதற்காகவும் எதிர்காலத்தை காப்பதற்கும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.எனவே பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு பிரதமர் மோடி பேசினார்.