பிப் 16 வேலூர் வரும் எடப்பாடி பழனிச்சாமி!

ஜி.கே.சேகரன்,
வேலூரில் அதிமுக இளைஞர்கள் இளம் பெண்கள் பாசறை மண்டல மாநாடு வரும் 16 ஆம் தேதி நடக்கவுள்ளது இதற்கான பந்தக்கால் நடும் விழாவில் முன்னாள் அமைச்சர் பங்கேற்றார்.
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டை மைதானத்தில் வரும் 16 ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் இளைஞர்கள் இளம் பெண்கள் பாசாறை மண்டல மாநாடானது நடக்கவுள்ளது.
இதற்கான பந்தக்கால் நடும் விழாவானது முன்னாள் அமைச்சர் வீரமணி தலைமையில் நடந்தது.
இதில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் அப்பு,வேலழகன் ,சுகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன்,முக்கூர் சுப்பிரமணி,உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அதிமுக மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டனர் இதில் சிறப்பு அழைப்பாளராக இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் பந்தாக்கால் நாட்டு வைத்தா£.
¢ இதில் திரளான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர் வரும் 16 ஆம் தேதி நடக்கவுள்ள இந்த மண்டல மாநாட்டில் தமிழக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.