அரசு சீக்ரெட்டை அண்ணாமலைக்கு அவுட் செய்யும் ஆள்காட்டி யார்?

ம.பா.கெஜராஜ்,
தமிழக அரசின் பல சீக்ரெட்டுகள் பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எப்படியோ தெரிந்துவிடுகிறதாம். இதனால் முதலமைச்சர் அலுவலகம் உஷார் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
தமிழக அரசின் கொள்கை முடிவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வகுக்கும் நிலையில், அது பற்றி தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கு முன்கூட்டியே தெரிந்து விடுகிறதாம். அதாவது, மகாபலிபுரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் விவகாரம்; மின்சார கொள்முதல், கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து மாவு கொள்முதல் டெண்டர் உள்ளிட்ட விவகாரங்கள் அண்ணாமலைக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டதாம்.
இதனால் தமிழக முதலமைச்சர் அலுவலகம் உஷார் ஆகி தலைமைச் செயலகத்தில் இருந்து யார் மூலமாக தகவல்கள் செல்கிறது என்பது குறித்து விசாரிக்கும்படி முடுக்கிவிடப்பட்டிருக்கிறார்களாம்.
இந்த விவகாரத்தை அறிந்த அந்த ஆள்காட்டி அலுவலர் பதற்றத்தில் உள்ளாராம், அதுவே அவரை காட்டிக் கொடுக்கப்போவுது என்கிறார்கள்.