ஒன்னரை லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

க.பாலகுரு,
குட்கா கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது.1,50,000 ரூபாய் மதிப்புள்ள 429 கிலோ குட்கா பறிமுதல்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தம்பிக்கோட்டை கீழக்காடு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வாழைத்தார் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை இட்டனர்.
அப்போது அதில் 30 மூட்டைகள் குட்கா மறைத்து கொண்டுவரப்பட்டது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்டு விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்தது தஞ்சாவூரைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பதும், 1,50,000 மதிப்புள்ள 429 கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார் குட்கா,வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட அசரப் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.