காமுகனுக்கு 21 ஆண்டு சிறை! எஸ்பி மற்றும் புலனாய்வு குழுவை பாராட்டிய டிஐஜி !

காமுகனுக்கு 21 ஆண்டு சிறை!  எஸ்பி மற்றும் புலனாய்வு குழுவை பாராட்டிய டிஐஜி !

கடந்த 24.12.2021-ம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை உட்கோட்ட எல்லைக்குட்பட்ட ஆலமரத் தெரு, பழைய காலனி, மேல்புதுப்பாக்கம் கிராமம், கலவை தாலூக்காவை சேர்ந்த பெருமாள்(51) த/பெ முனுசாமி என்பவர் மீது இளம் சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்ததற்காக இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண் Cr.No.27/2021 U/s 5(I), 5(j)(ii) r/w 6 of POCSO Act @ 5(1), 5(j)(ii), 342, 376(2)(n) r/w 6 of POCSO Act-ன் படி வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . மேற்படி வழக்கு சம்மந்தமாக வேலூர் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் வேலூர் POCSO நீதிமன்றத்தில் இன்று 27.06.2023-ம் தேதி மாண்புமிகு நீதிபதி திருமதி. கலைபொன்னி, மாவட்ட அமர்வு நீதிபதி (ம) POCSO சிறப்பு நீதிமன்றம் வேலூர் அவர்களால் வழக்கில் தொடர்புடைய எதிரி பெருமாள்(51) த/பெ முனுசாமி, ஆலமரத் தெரு, பழைய காலனி, மேல்புதுப்பாக்கம் கிராமம், கல்வை தாலூக்கா என்பவருக்கு ஆண்டுகள் 21 கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய். 6,000/- அபராதம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும், இவ்வழக்கை சிறப்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி தண்டனை பெற்று தந்த சிறப்பு அரசு வழக்கறிஞர் திருமதி . சந்தியா மற்றும் வழக்கின் புலனாய்வு அதிகாரி திருமதி . வாசுகி, (முன்னாள் இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்), திருமதி.ஷாஹின், (தற்போதைய இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்) மற்றும் நீதிமன்ற காவலர் (Court Police) WGI-358 திருமதி. பிரேமா ஆகியோரையும், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்களையும் வேலூர் சரக டிஐஜி திரு எம் .எஸ் .முத்துசாமி , இ. கா.பஅவர்கள்வெகுவாக பாராட்டினார்.