நீர்நிலை நிரம்பும் வரை உள் பாசன முறையை கைவிடுங்க! விவசாயிகள் கொதிப்பு!

நீர்நிலை நிரம்பும் வரை உள் பாசன முறையை கைவிடுங்க! விவசாயிகள் கொதிப்பு!

க.பாலகுரு,

  மேட்டூரில் இருந்து உடனடியாக 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் காத்திருப்பு போராட்டம்.

  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் பி. ஆர் பாண்டியன் தலைமையில் குருவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும் இதுவரை ஆறுகளில் சரியான முறையில் தண்ணீர் வரவில்லை எனவும்  குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

  எனவே உடனடியாக மேட்டூரில் இருந்து 18,000 கன அடி தண்ணீரை திறக்க வேண்டும், அனைத்து நீர்நிலைகளும் நிரம்பும் வரை உள் பாசன முறையை கைவிட வேண்டும் காவிரி மேலாண்மை ஆணையம் ஜூன் மாதத்திற்கு தமிழகத்துக்கு தர வேண்டிய 9.1 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் அவர்களிடம் மனு அளித்தனர்.

  தொடர்ந்து இந்த கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்தும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.  இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரபான சூழ்நிலை நிலவியது.