கஞ்சா வியாபாரியிடம் கூட்டு?!ஏட்டாய்யாவுக்கு வேட்டு!!

கஞ்சா வியாபாரியிடம் கூட்டு?!ஏட்டாய்யாவுக்கு வேட்டு!!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி, 

கஞ்சா வியாபாரியிடம் கூட்டு வைத்திருந்த ஏட்டாய்யாவுக்கு போலிஸ் கமிஷனர் வேட்டு வைத்திருக்கிறார்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக காமினி இ.க.ப. அவர்கள் உள்ளார். அவர் பொறுப்பேற்றது முதல் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் சமூக விரோத செயல்களை தடுக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

  அதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி போலீஸ்காரர் காளி முத்துவை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

  இது போலிசார் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சமூக விரோத வியாபாரத்துடன் தொடர்பு வைத்துள்ள போலிசாருக்கு கிலி கொடுத்திருக்கிறது.