கணவனுடன் தொடர்பு எதிரொலி! கள்ளக்காதலியை செக்ஸ் வீடியோ எடுத்து டார்ச்சர்! ஐவர் கைது!!

கணவனுடன்  தொடர்பு எதிரொலி! கள்ளக்காதலியை செக்ஸ் வீடியோ எடுத்து டார்ச்சர்! ஐவர் கைது!!

 வித்யா சாகர்,

 கணவனுடன் ஒரு பெண் கள்ள தொடர்பு வைத்திருந்தார் என்பதை அறிந்த அந்த கள்ளக்காதலியை செக்ஸ் வீடியோ எடுத்து டார்ச்சர் செய்தார். அதற்காக அவர்  கூலிப்படையை வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தமைக்காக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது பற்றின விவரம் வருமாறு,

   தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கோண்டாப்பூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவரது கணவர் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது, அந்த பெண்ணும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார்.

  இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

அப்படியிருக்க, உடல்நிலை சரியில்லாத காரணத்தால், காயத்ரி பாதிக்கப்பட்ட பெண்ணை கோண்டாப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்தார், மேலும் அவர் பிப்ரவரி 2022 வரை அவர் தம்பதியினருடன் தங்கி இருந்தார்.

  அப்போது தனது கணவருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருப்பது காயத்ரிக்கு தெரியவந்தது. இது குறித்து காயத்ரி ஏப்ரல் 24 போலீசில் புகார் அளித்தார்.

  போலிசார் வழக்கம் போலவே ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், காயத்ரி, தனது சக்களத்தியை பழி வாங்க மாற்று பாதையை தேர்வு செய்தார். 

   இதற்காக ஒரு கூலிப்படையை அணுகினார். அவர்களை அழைத்து வந்து ஒரு அறையில் தங்கவைத்தார்.பின்னர் வழக்கை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் வீட்டுக்கு அழைத்துள்ளார். அவர் வந்து காய்த்ரியுடன் பேசி உள்ளனர்.

  பின்னர் காயத்ரி அந்த பெண்ணை வீட்டின் மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்றார், அங்கு கூலிப்படை ஆட்கள் அந்த பெண்ணை தாக்கி உள்ளனர்.

 பின்னர் அந்த பெண்ணை துணியால் வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவத்தை காயத்ரி தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

 மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வேன் என பாதிக்கப்பட்ட பெண்ணை காயத்ரி மிரட்டியுள்ளார்.

 பலத்த காயம் அடைந்த பெண் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 இதுகுறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தில் காயத்ரி மற்றும் நான்கு இளைஞர்கள் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 கணவனை கைப்பாவையாக வைத்துக்கொள்ள காயத்ரி போட்ட திட்டம் அவரை சிறைக்கு அனுப்பிவைத்திருக்கிறது. கூடவே நான்கு வாலிபர்களும் சிக்கியிருக்கிறார்கள்.