சந்திரபாபு மற்றும் நிதீஷ்குமாருக்கு ஆசை காட்டி வலைவீசும் என்.டி.ஏ. மற்றும் இந்தியா கூட்டணிகள்!

சந்திரபாபு மற்றும் நிதீஷ்குமாருக்கு ஆசை காட்டி வலைவீசும் என்.டி.ஏ. மற்றும் இந்தியா கூட்டணிகள்!

வி.டி.வித்யாசாகர்,

 ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில்,தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 9-ம் தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த மே மாதம் 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

 இந்நிலையில் மத்தியில் பெரும்பாண்மை யாருக்கும் கிடைக்காததால் என்.டி.ஏ. மற்றும் இந்தியா கூட்டணிகள் ஆந்திராவையும், பீகாரையும் அவர்கள் நம்பியிருக்கிறார்கள்.

 அந்த வகையில் கூட்டணியை தக்கவைக்க பாஜகவும், தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸிம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

  பாஜக சார்பில் ஒருங்கிணைபாளரே சந்திரபாபு தான் என்றும், காங்கிரஸ் சார்பில் நிதிஷிக்கு துணைபிரதமர் பதவி கொடுப்பதாகவும் கொக்கி போட்டு வருகிறார்கள்.

 நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் மற்றும் அதன் கூட்டணி வெற்றி பெற்றது. குப்பம் தொகுதியில் தொடர்ந்து 9-வது முறையாக களத்தில் இறங்கிய சந்திராபாபு நாயுடு, அவரை எதிர்த்து போட்டியிட்ட பரத் என்பவரை வென்றார்.

 பிட்டாபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் வெற்றி பெற்றார்.மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 133 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதன்படி 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

  கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. இக்கட்சி வெறும் 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் தோல்வியை தழுவியது.

 அதன் காரணமாக 21 இடங்களில் வெற்றி பெற்ற பவன் கல்யாண் எதிர்கட்சி தலைவர் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. ஜெகன் கட்சியை சேர்ந்த அமைச்சர்களான ரோஜா உட்பட பலர் தோல்வி அடைந்தனர். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பீலேர் தொகுதியில் போட்டியிட்ட பெத்திரெட்டி ராம சந்திர ரெட்டி ஆகிய இருவர் மட்டுமே அமைச்சரவையில் இருந்து வெற்றி பெற்றனர்.

  இதே போன்று மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஜனசேனா 2 தொகுதிகளையும், பாஜக 3 தொகுதிகளையும் வென்றுள்ளது. ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி வெறும் 4 மக்களவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதனால் ஆளுங்கட்சிக்கு மக்கள் தோல்வியை அளித்து வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

  இந்த சூழலில் தான் சந்திரபாபு நாயுடு கிங்மேக்கர் ஆகியிருக்கிறார்.