மனைவியை தாஜா செய்ய லீவு கேட்ட அரசு ஊழியரின் கடிதம்!

மனைவியை தாஜா செய்ய லீவு கேட்ட அரசு ஊழியரின் கடிதம்!

  ஜார்ஜ்.ரவி,

  தன்னிடம் கோபமுற்று சென்றுவிட்ட மனைவியை தாஜா செய்து கூட்டிவர மூன்று நாள் விடுமுறை கேட்டு அரசு ஊழியர் கடிதம் எழுதியிருக்கிறார். அரசு ஊழியரின் இந்த கடிதம் இணையத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

   அரசு ஊழியர்கள் தங்களுக்கு லீவு வேண்டும் போது உறவினர் வீட்டு பங்ஷன், சொந்த ஊரில் திருவிழா என்று பல்வேறு காரணங்களை கூறுவர்.

  ஆனால் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது உயர் அதிகாரிக்கு லீவு லெட்டர் அளித்துள்ளார். அந்த விண்ணப்பத்தில், தனது மனைவி கோபித்துக்கொண்டு  3 குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

  ஆகவே கிராமத்தில் இருக்கும் மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்துவர விடுப்பு தேவைப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் 4 முதல் 6 வரை விடுப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.