2 சதவீத ஆதரவு பெற்ற ஓபிஎஸ் - ஐ எப்படி தலைவர் ஆக்குவது!

க.பாலகுரு,
திருவாரூரில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நகர கழக சார்பில் பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது காமராஜ் பேசியதாவது, அண்ணா பிறந்தநாள் விழாவில் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என உறுதி ஏற்போம்.
பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக கட்சி தற்போது குடும்பக் கட்சியாக செயல்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் திமுக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் அதிமுக அரசால் கொண்டுவரப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி ஏச்சிகளும், பேச்சுகளையும், சோதனைகளையும் கடந்து நான்கரை ஆண்டுகளாக சிறப்பாக தமிழகத்தை ஆட்சி செய்தவர் அவர்.
பேரறிஞர் அண்ணா ஜனநாயகபுரம் முறைப்படி கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோன்று எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கேள்வி எழுந்த போது, 98 சதவீதம் பேரின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி உள்ளது. 2 சதவீத ஆதரவு பெற்ற ஓபிஎஸ் - ஐ எப்படி தலைவர் ஆக்குவது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திமுகவை எதிர்த்தார், அதிமுகவின் தலைவர் ஆனார் அதேபோன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் திமுகவை எதிர்த்து தலைவரான தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அதே வழியில் திமுக எதிர்த்து தலைவராகியுள்ளார். ஜனநாயக முறைப்படியும் தார்மீக அடிப்படையில் அதிமுகவின் தலைவராக உள்ளார் என்றார்.