பி.எஸ்.என்.எல்-ல் போலி சாதி சான்றுகள் மூலம் பணி! உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

பி.எஸ்.என்.எல்-ல் போலி சாதி சான்றுகள் மூலம் பணி! உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜி.கே.சேகரன்! 

   போலி சாதி சான்றுகள் மூலம் பணியில் உள்ளவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பிஎஸ்.என்,.எல் ஊழியர்கள் கோரிக்கை

  வேலூர் மாவட்டம்,வேலூரில் உள்ள பிஎ.ஸ்.என்.எல் பொதுமேலாளர் அலுவலகத்தில் பிஎ.ஸ்.என்.எல் எஸ்.சி எஸ்டி ஊழியர் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் வைரமணி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

 மாநில செயலாளர் பன்னீர் செல்வம் தர்ணா போராட்டத்தை துவங்கி வைத்தார், இதில் வேலூரில் எஸ்சி.எஸ்டி ஊழியர் நல சங்க அலுவலகத்தை பூட்டி வைத்துகொண்டு பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் ஸ்ரீகுமார் அடாவடிதனமாக செயல்பட்டதை கண்டித்தும், நிர்வாகத்தில் குழப்பமான நிலை ஏற்படுத்திவருவதுடன் 18 மாதங்களாக எஸ்.சி எஸ்டி ஊழியர்களின் பிரச்சணைகளுக்கு தீர்வு காணாமல் கிடப்பில் போட்டுள்ளார் நிர்வாக நடைமுறையை அவர் சரியான முறையில் கையாளவில்லை என கூறி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

  இதில் போலி சாதி சான்றிதழ் கொடுத்து பலர் பணியில் உள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாலியல் தொல்லைகளை தடுக்க கோரியும் மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகியை தரக்குறைவாக பேசியதை கண்டித்தும் இந்த ஆர்பாட்டத்தில் பேசப்பட்டது.

   இதில் மாநிலம் முழுவதுமுள்ள பிஎ.ஸ்.என்.எல் ஊழியர்களும் பல்வேறு சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.