வடிகால் வாய்காலையாவது தூர் வாருங்கப்பா?

க.பாலகுரு
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே பாலையூர் நத்தம் வடிகால் வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
திருமக் கோட்டை அருகே பாலையூர் நத்தம் கிராமத்தில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல்கள் உள்ளன.
இந்த கிராமங்களை சுற்றி பரசபுரம் சோத்திரியம் எளவனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறது, இங்குள்ள வயல்களில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்காக அதன் அருகிலேயே வடிகால் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வடிகால் வாய்க்கால் தூர்ந்து போய் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது.
இதனால் வயலில் இருந்து தண்ணீர் வெளியேற முடியாமல் வயலில் தேங்கியுள்ளதால், விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை விவசாயிகளுக்கு, பாதிக்காத வகையில் பாசன வாய்க்கால், வடிகால் வாய்க்கால்களை தூர் வார வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.