வீட்டுக்கு முன் ஆட்டுத்தலை சூன்யம்!

வீட்டுக்கு முன் ஆட்டுத்தலை சூன்யம்!

 ஜி.கே.சேகரன்,

  வீட்டின். முன் ஆட்டுதலை, சூலம், எலுமிச்சம் பழங்கள் வைத்து மஞ்சள் குங்குமம்,கடுகு தூவி மாந்திரீகம் செய்து விட்டு  சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பா,டி சலாமாபாத் 3-ஆவது  தெருவில் வசித்து வருபவர் கலிமுல்லா, இவர் சமையல் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அமாவாசை என்பதால் நள்ளிரவில் .கலிமுல்லா வீட்டின் முன்பு  மரமநபர்கள் கதவை கம்பி வைத்து மூடிவிட்டு வீட்டின் முன் ஆட்டுதலை வைத்து அதற்கு குங்கும்,மஞ்சள் பூசிவிட்டு  கடுகு ஆகியவற்றை தூவி  விட்டு சென்றுள்ளனர்.

  காலை வீட்டிலிருந்து கலிமுல்லா வெளியில் செல்வதற்காக கதவு திறந்த போது, திறக்க முடியாமல் போனது. எனவே, பக்கத்து வீட்டாரை அழைத்தார். அவர்கள் வந்து பார்த்துவிட்ட்டு பதறி ஓடினார்கள். ஆகவே கலிமுல்லா செல்போனில் வேறு சிலரை அழைத்து கடவை திறந்து  வெளியே வந்து பார்த்தார்.  வீட்டின் வெளியில் ஆட்டுத்தலை எலுமிச்சம் பழங்கள் குங்குமம் மஞ்சள் போன்ற பொருட்களை கண்டு பயந்து போனார்.

  நேற்று அமாவாசை என்பதால் யாரேனும் மாந்திரீகம் செய்து சென்றதாக கூறி உடனடியாக அனைத்து பொருட்களையும் எடுத்து கழிவு நீர் செல்லும் கால்வாயில் வீசி சென்றுள்ளார்.

  இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால் அப்பகுதியே மிகவும் பெரும் பரபரப்பாக  காணப்பட்டது. உடனடியாக தகவல் அறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இது குறித்து பூசாரி ஒருவர் தெரிவிக்கையில், அந்த வீட்டுக்காரரை அவரது எதிரி மிரட்டுவதற்காகவே இப்படி ஆட்டுத்தலையை வெட்டி மாந்திரீகம் செய்த மாதிரி செய்துள்ளார்கள்.

  மற்றபடி இதெல்லாம் பலிக்காது என்றார். இருந்தாலும் பயமா அல்லவா இருக்கும்.