கடன் பிரச்சனைக்காக இப்படி செய்யலாமா?

கடன் பிரச்சனைக்காக இப்படி செய்யலாமா?

கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 இராஜபாளையம் அருகே கடன் தொல்லையால் குடும்பத்துடன் விஷம் அருந்திய நிலையில்  மனைவி பலியானார். கணவர் மற்றும் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட்டு வருகிறது.

 விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் செங்குந்த முதலியார் தெருவில் வினோ கோபு (30) என்பவருக்கு சொந்தமான வீட்டில்  கணேசன், மனைவி முத்துமாரி), மகள் குரு பிரியா மற்றும் மகன் சபரிநாதன் ஆகியோர் வசித்து வந்தனர்.

 இந்த நிலையில் கணேசனுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மற்றும் உடல்நிலை சரியில்லாமல் அடிக்கடி சிகிச்சைக்கு செலவு செய்து வந்ததாகவும் தெரிகிறது.

 இதனால் மனம் உடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.

 பின்னர்,  தென்னை மரத்திற்கு போடக்கூடிய பூச்சி மாத்திரையை குடும்பத்தினர் சாப்பிட்டுள்ளனர். பின்பு காலை அக்கம் பக்கம் உள்ளவர்கள் தகவல் தெரிவித்ததின்  பேரில் சேத்தூர் போலீசார் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 காலை 9 மணி அளவில் முத்துமாரி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். கணேசன்  மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

 மகன் மற்றும் மகள் உடல்நிலை நலமாக உள்ளனர். இத்தொடர்பாக சேத்தூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.