அதிரடி காட்டும் வாணியம்பாடி தவெகவினர்! முதியவர்களுக்கு தினமும் உணவு வழங்குகிறார்கள்!
ஆர்.ரமேஷ்,
வாணியம்பாடி மேட்டுப்பாளையம் 15 வது வார்டில் முதியவர்களுக்கு தினமும் காலை 7:00 மணி முதல் 10 மணி வரை காலை உணவு அளிக்கப்படும் என்று தவெக கட்சியினர் அறிவித்து செயல்பட்டுவருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் 15 வது வார்டு கிளை சார்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் முனிசாமி, மாவட்ட நிர்வாகிகளும் உதயேந்திரம் பேரூராட்சி தலைவர் தங்கமணி பேரூராட்சி நிர்வாகிகளும், சந்தோஸ், மேட்டுப்பாளையம் 15 வது வார்டு தலைமை தீபன் மற்றும் அரிஸ் பாபு, திலகரசன், கோவிந்தராஜ், அர்ஜுன், மதன்குமார், பாண்டியன், வேலு, திருவள்ளுவன், அஜய் ராஜேஷ் வெங்கடேசன் அஜித் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில், வான வேடிக்கை மேளதாளத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் மாவட்டத் தலைவர் முனிசாமி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பிறகு 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், மேட்டுப்பாளையம் 15 வது வார்டு தீபன் மற்ற நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து வயதான முதியவர்களுக்கு காலை 7:00மணி முதல் 10:00 மணி வரை காலை உணவு அளிக்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் அவரது அறிவிப்புக்கு ஏற்றார் போல் மாவட்ட தலைவர் முனிசாமி அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பின்பு அவர் தெரிக்கையில், மாவட்டம் முழுவதும் இது போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்திட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்படும்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனைத்து இடங்களிலும் வெற்றி கிட்டும். தொண்டர்கள் அதற்காக உற்சாகமாக பணியாற்றுவோம். மக்களும் எங்களை பெரிதும் வரவேற்கிறார்கள். ஏனென்ன்றால் மாறி மாறி ஆட்சியை பிடித்த கட்சிகளால் தமிழக மக்கள் பெரும் அவதிகளை பட்டு வருவதை அவர்கள் இனியும் ஏற்க தயாராக இல்லை.
அதை உணர்ந்தே மக்கள் மத்தியில் தவெக நம்பிக்கைப் பெற்று வருகிறது என்றார். உறுதுணையாக இருக்கும் என்று நம்பிக்கை அளித்தார்.