கடை கண்ணாடிகளை உடைத்து ரகளை செய்த சகோதரர்கள்! பிரதான சாலையில் பதற்றம்!

கடை கண்ணாடிகளை உடைத்து ரகளை செய்த சகோதரர்கள்! பிரதான சாலையில் பதற்றம்!

 ஜி.கே.சேகரன்,

மாதனூர் பேருந்து நிலையம் அருகில் இடம் பிரச்சனை தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் துணிக்கடை கண்ணாடி உடைத்து சேதம்.

   திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் வாத்தியார்பட்டி பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பழனி சிவலிங்கம் சங்கர்.  இவர்களுக்கு சொந்தமாக மாதனூர் பேருந்து நிலையம் அருகில் ஐந்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

   இதில்  பேக்கரி துணிக்கடை என தனித்தனியே அண்ணன் தம்பிகள் வியாபாரம் செய்து வரும் நிலையில், சில ஆண்டுகளாக கடை பாகப்பிரிவினையில் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் நேற்று திடீரென பழனி சிவலிங்கம் மற்றும் சங்கர் ஆகிய இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு சாலையில் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர்.

   மேலும் பழனி சிவலிங்கத்தின் ஆதரவாளர்கள் சங்கர் துணிக்கடையில் இருந்த கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

  பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அங்கு இருந்த பொதுமக்கள் அச்சத்துடன் செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டது.

  தகவல் அறிந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் இரு தரப்பினரின் கடைகளை மூடி அப்புறப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டனர்.