பி.டி.ஓ-வை கடிந்து கொண்ட கலெக்டர்!

பி.டி.ஓ-வை கடிந்து கொண்ட கலெக்டர்!

ஜி.கே.சேகரன்,

 கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கள ஆய்வு மேற்கொள்ளும்போது கந்திலி வட்டார வளர்ச்சி அதிகாரியை கடிந்து கொண்டார்.

 திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரியனேரி ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் தரப்பகராஜ்  கள ஆய்வு  மேற்கொண்டார்.

  இந்நிலையில் நரியனெரி ஊராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள் தெரு சாலை மற்றும் அரசு நடுநிலை பள்ளி கழிப்பறைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு  சிகிச்சை அளிப்பதை குறித்து போன் செய்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

  பின்னர் கால்நடை மருத்துவமனைக்கு சென்று கோமாரி தடுப்பூசிகள் சிகிச்சை குறித்து விசாரித்தார்.

  தொடர்ச்சியாக, அரசு நடுநிலைப் பள்ளியில் சென்று ஆய்வு மேற்கொள்ளும் பொழுது, பள்ளியில் புதியதாக கட்டப்பட்ட  கழிவரையின் மேல் சீலிங் சிதலமடைந்து பெயர்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதை ஆட்சியர் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  கழிப்பறை ஏன் இப்படி உள்ளது என்று வட்டார வளர்ச்சி அலுவலரை கடிந்து கொண்டார்

 பின்னர் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது தீ விபத்தை தடுக்கும் அணைபான் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

  இந்நிகழ்ச்சியில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்