"எப்படியாச்சும் கூப்பிடுங்க!அழுகையா வருது! விஜய் வீட்டு வாயிலில் சிறுமி களேபரம்!

"எப்படியாச்சும் கூப்பிடுங்க!அழுகையா வருது! விஜய் வீட்டு வாயிலில் சிறுமி களேபரம்!

 ஜி.சாந்தகுமார்,

   "எப்படியாச்சும் கூப்பிடுங்க...அழுகையா வருது.... என்று விஜய் வீட்டு வாயிலில் சிறுமி களேபரம் செய்தார்.

 சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டு வாயிலில் நின்று கேமிராவை பார்த்தபடி சிறுமி ஒருவர் கதறி அழுத காட்சிகள் பரபரப்பாக பேசப்படுகிறது.

   காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிற் உமி தனது பெற்றோருடன் விஜய் வீட்டின் அருகே வந்துள்ளார்.

  அங்கு நுழைவு வாயிலில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை பார்த்தபடி, “எப்படியாச்சும் கூப்பிடுங்க. எனக்கு அழுகையா வருது. நீங்க கூப்பிடுவீங்கனு நம்பிக்கைல இருக்கேன். தேங்க்யூ. தளபதிய பாக்க காஞ்சிபுரத்துல இருந்து வந்திருக்கேன்.” என கெஞ்சினார்.

  இது குறித்து இணையவாசிகள் தெரிவிக்கையில், நடிகர்கள் மீதான மோகம் ரசிகர்களுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதற்காக திடீர் என்று நடிகர்களின் வீட்டருகே வந்து சிசிடிவி கேமிராவை பார்த்து கெஞ்சுவதும், அதற்கு அந்த ரசிகரின் பெற்றோர் துணை போவதும் சரியான அப்ரோச் கிடையாது என்கிறார்கள்.