ஆராத்திக்கு பணம் கொடுத்து சிக்கிய அண்ணாமலை

ஆராத்திக்கு பணம் கொடுத்து சிக்கிய அண்ணாமலை

உ.சசிகுமார்,

கோவை நாடாளுமன்ற தொகுதியில் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை போட்டியிடுகிறார்.

அவர் வேட்பு மனு தாக்கல் செய்த தினத்திலிருந்து அவரை சுற்றி கண்கொத்தி பாம்பாக அதிமுகவும் திமுகவும் நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன.

அப்படி இருக்க அவருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று மனு கொடுத்து பின்னர் ஒரு வழியாக அவர் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதிலிருந்து வெளியில் வந்த அண்ணாமலை தற்போது ஆரத்தி எடுத்த ஒரு பெண்ணுக்கு  தட்டுக்கு கீழே பணம் கொடுப்பது போன்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக எக்ஸ் பதிவில் வெளியான செய்திக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அலுவலருமான கிராந்திக்குமார் அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவு செய்து இருக்கிறார்.