தூத்துக்குடியில் கனிமொழி!

 தூத்துக்குடியில் கனிமொழி!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

தூத்துக்குடி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பழைய மாநகராட்சி அலுவலகத்தில்,நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி அவர்களும் மற்றும் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் ஆகியோர் உத்தமர் காந்தியடிகள் அவர்களின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 அதேபோல், கோவில்பட்டி நகராட்சி உ.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை நுழைவு வாயிலையும்  திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப.,அவர்கள் உள்ளார்.

 ஆட்சித் தலைவர் மரு.கி. செந்தில்ராஜ்,

  தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்  மற்றும் நேரு யுவ கேந்திரா  ஆகிய இணைந்து நடத்தும் தூய்மையான  இந்தியா திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் கழிவு குப்பைகளை அகற்றும் பணிகளை  மாவட்ட ஆட்சித் தலைவர்  மரு.கி. செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தூத்துக்குடி ரோச் பூங்கா கடற்கரையில் கொடியசைத்து  துவக்கி வைத்தார். அருகில் உதவி ஆட்சியர் பயிற்சி திரு.ஸ்ருதஞ் ஜெய்  நாராயணன் இ.ஆ.ப., நேரு யுவ கேந்திராவை சார்ந்த இளைஞர் மன்ற தன்னார்வலர்கள்  ஆகியோர் உள்ளனர்.