அதிமுக - திமுக- ஒரே நாளில் மா.செ-க்களை சந்திக்கிறது! என்ன காரணம்?

ம.பா.கெஜராஜ்,
தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இன்று வெள்ளிக்கிழமை ஒரே தினத்தில் தங்கள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்துகிறார்கள்.
திமுக
முன்னதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், இன்று காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கழகத்தினர் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அண்ணா பிறந்த நாள் (செப்டம்பர் 15), பெரியார் பிறந்த நாள் (செப்டம்பர் 17), திமுக தொடங்கப்பட்ட நாள் (செப்டம்பர் 17) ஆகிய மூன்று முக்கியமான நிகழ்வுகள் வருகின்றன. இதனை முப்பெரும் விழாவாக திமுக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.
திராவிட மாதம் என்ற பெயரில் திமுக ஐடி விங் சில நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும். நடப்பாண்டும் அத்தகைய நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகள், கழகத்தினரின் பங்களிப்பு ஆகியவை தொடர்பாக இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
இவைகளுக்காகாவே மாசெக்கள் கூட்டத்தை நடத்துவதாக கூறப்பட்டாலும், முதல்வர் 17 நாள் அயல் நாட்டுப் பயணம் மேற்கொள்ள இருப்பதால் அந்த சமயத்தில் நிர்வாகத்தை யார் பார்ப்பது என்பது போன்ற பல இன்ஸ்ட்ரெஞ்ஷன்கள் கொடுக்கவே இந்தக்கூட்டம் என்று சொல்லப்படுகிறது.
அதிமுக
அதேபோல் அதிமுக தரப்பில் அக்கட்சியின் அவசர செயற்குழு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறார்.
இந்த கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். அதிமுகவை பொறுத்தவரை வெற்றி எப்போது கிட்டும் என்கிற ஒரே ஒரு விஷயம் தான் பிரதானமாக இருக்கிறது.
ஒவ்வொரு தோல்வியில் இருந்து பாடம் கற்று வரும் நிலையில் அதை மறு ஆய்வுக்கு உட்படுத்தி அடுத்தகட்ட செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதைப்பற்றி அலசவே இந்தக்கூட்டமாம்.