ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கோடநாடு சென்ற சசிகலா!

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கோடநாடு சென்ற சசிகலா!

டி.இ.முகமது இர்பான்,

2017-ல் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகு சசிகலா அங்கு செல்லாமல் இருந்தார். இந்நிலையில் நிலையில் ஜெயலலிதா மறைந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு  சசிகலா கோடநாடு சென்றார்.

 நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சயான், வாளையார் மனோஜ், ஜிஜின், திபு, ஜம்சீர் உட்பட 11 பேரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 அப்படியிருக்க, 7 ஆண்டுகளுக்கு பிறகு நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டிற்கு வி.கே.சசிகலா இன்று மாலை சென்றார். அதற்காக சென்னையில் இருந்து காலை புறப்பட்டார். சசிகலா இன்று கொடநாடு பங்களாவில் தங்குகிறார். கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் சிலை வைப்பதற்கான பூமி பூஜையில் நாளை பங்கேற்கிறார். பூஜையை தொடர்ந்து தனது முக்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை பிப்.24ல் சசிகலா திறந்து வைக்க உள்ளார் என்கிற நிலையில் இந்த பயணத்தை அவர் மேற்கொண்டிருக்கிறார்.