திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் செல்லும் பிரதமர்!

உ.சசிகுமார்,
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக நாளை பிரதமர் மோடி சென்னை வருகிறார். சென்னை நிகழ்ச்சி முடிந்ததும் இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி, நாளை மறுநாள்(20ம் தேதி) காலை 9.20 மணிக்கு விமானத்தில் திருச்சி வருகிறார். பின்னர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்.
சுமார் 40 நிமிடங்கள் கோயிலில் இருக்கும் பிரதமர், கோயில் பகுதிகளை பார்வையிட உள்ளார். பின்னர் அங்கிருந்து மதுரை புறப்பட்டு செல்கிறார். இந்நிலையில் பொன்மலை ஜி.கார்னர் ரயில்வே மேம்பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடியை, ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றியிருக்கும் கடைகள் இன்று முதலே மூடப்பட்டது