மாணவியை அனுபவித்துவிட்டு அம்போ என்று விட்டவன் கைது!

ஜி.கே.சேகரன்,
அனைக்கட்டு பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வெல்டிங் தொழிலாளி போக்ஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம், அனைக்கட்டு அருகேயுள்ள முகமதுபுரம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி விஸ்வநாதன் (23).
இவர் அதே கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை ஓராண்டாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி அந்த பெண்ணை யாருக்கும் தெரியாமல் கட்டாயப்படுத்தி அழைத்து சென்று தாலி கட்டியதுடன் அதே பகுதியில் பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.
பின்னர் குடியாத்தம் அருகே அந்த பெண்ணை விட்டுவிட்டு, இங்கேயே இரு வருகிறேன் என சொல்லிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை.
இதனால் அந்த பள்ளி மாணவி அங்கு இருந்து வீட்டிற்கு சென்று நடந்தவற்றை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார் இதன் அடிப்படையில் வேலூரில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து வெல்டிங் தொழிலாளி விஸ்வநாதனை போக்ஸ்கோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.