ஆதார் சேவை மையத்தில் அடாவடி பெண் பணியாளர்!

ஆதார் சேவை மையத்தில் அடாவடி பெண் பணியாளர்!

 S.விஜய்,  

 காட்பாடி தாலுக்கா அலுவலகம், ஆதார் சேவை மையத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் மீது நாளுக்கு நாள் புகார் கூறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு?

  தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசு பொது இ-சேவை மையம் பல்வேறு கிளைகளைப்பெற்று ஆதார் கட்டாயமாக் கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பட்டா, சிட்டா, இருப்பிட சான்றுக்கான விண்ணப்பம் ஆகியவை இது போன்ற மையங்களில் தான் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்பதால் மக்கள் அதை தேடி சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

  தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் பொது இ-சேவை மையம் சார்பில் வேலூர் மாவட்டம் முழுவதும் 13 பொது இ-சேவை மையம் அமைந்துள்ளது.

  அதில் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மையத்தில்,  சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெண் பணியாளர் பணிபுரிந்து வருகிறார். இவர் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் பக்கத்திலே இருப்பதால் நாள்தோறும் காலை 10 மணிக்கு ஆதார் சேவை மையத்திற்கு வந்து திறக்கப்பட்டு மாலை 5.30 மணிக்கு ஷட்டரை மூடிவிடுகிறாராம்.

   மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதி பொதுமக்கள், முதியவர்கள், பள்ளி, கல்லூரி மாணவியர்கள், மற்றும் கிராமப்புறங்களில் இருந்தும் படிப்பறிவில்லாத பாமர மக்கள் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையத்தை நாடினால் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இன்று போய் நாளை வா என அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.

  இது தொடர்பாக பயனாளி ஒருவர் கூறுகையில் காட்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட செங்குட்டை சத்திரம் தெருவை சேர்ந்த மனோகர் என்பவர் சென்ற வாரம். 21ஆம் தேதி காலை 10:30 மணிக்கு காட்பாடி ஆதார் சேவை மையத்தை நாடி உள்ளார் மனோகர். அங்கு பணியாற்றி பெண்  மரியாதை குறைவாக நடத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.

 மேலும், விருதம்பட்டு காவல் நிலையம் பின்புறம் செயல்பட்டு வரும் எல் காட் நிறுவனத்தின் ஆதார் சேவை மையத்திற்கு சென்று எடுத்துக்கொள் என்று விரட்டினாராம்.

 இவர் இது சம்பந்தமாக காட்பாடி வட்டாட்சியரை நேரில் சந்தித்து தனக்கு நேர்ந்த அவமரியாதையை பற்றி கூறியுள்ளார். வட்டாட்சியர் ஆதார் சேவை மையத்தில் பணிபுரியும் அந்த பெண்ணை கூப்பிட்டு பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது.

 ஆனாலும் அவர் திருந்தவில்லை என்பது தனிக்கதை.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வேலூர் கோட்டா அலுவலகத்தினரை தொடர்பு கொண்டு கேட்டபொழுது நான் என்னவென்று விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்கிறேன் என்று கூறினார்.

  அவரும் எந்த நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியவில்லை. காரணம் கட்டிங் தான் என்கிறார்கள்.

    மேலும் காட்பாடி தாலுக்கா அலுவலகத்தில் ஆதார் சேவை மையத்தில் பணிபுரிந்து வருபவரும் மேலாளரும் கல்லூரியில் பயின்ற நண்பர்களாம்.

  ஆகவே அந்த பெண் பணியாளர் மீது எந்த புகார் வந்தாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதவாறு காப்பாற்றி வருவதாகவும்.

 ஆகவே, அப்பாவி பாமர மக்கள் பயனுற அமைக்கப்பட்ட காட்பாடி இ.சேவை மையத்தில் இனியாவது பணிகள் சுமூகமாக நடக்கும் விதமாக அம்மணியை மாற்றினால் நலமாம்.