அரிசி ஆலை பாய்லரில் ஆசிட் விபத்து!

க.பாலகுரு,
அரிசி ஆலை பாய்லர் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டபோது, ஆசிட் வெடித்து சிதறி இருவர் படுகாயம் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி .
திருவாரூர் அருகே அலிவலம் கிராமத்தில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணி நடக்கும். தற்போது அப்பணிக்காக ஆலை ஓட்டம் நிறுத்தப்பட்டது.
பாய்லர் சுத்திகரிக்கும் பணியில் பின்னவாசல் பகுதியை சேர்ந்த நாகூரான் 55, பவுத்திரம் மாணிக்கம் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் 62 இருவரும் ஆசிட் ஊற்றி சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனார்
அப்போது எதிர்பாராத விதமாக ஆசிக் வெடித்து சிதறியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.