அதிமுக கூட்டணி கருத்து கணிப்புகளை பொய்யாக்கும்! பிரமலதா நாகை தொகுதியில் பிரச்சாரம்!

அதிமுக கூட்டணி கருத்து கணிப்புகளை பொய்யாக்கும்! பிரமலதா நாகை தொகுதியில் பிரச்சாரம்!

க.பாலகுரு,

 காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் மற்றும் மீனவர் நலன் காப்பாற்றப்படும் கொரடாச்சேரியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

 அதிமுக கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் சுர்ஜித்சங்கரை ஆதரித்து பிரச்சாரம் நடைபெற்றது. கொரடாச்சேரியில் நடந்த பிரச்சாரத்தில்,  அதிமுக மாவட்ட செயலாளர் இரா.காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பிரச்சார உரையாற்றினார்.

 அப்போது அவர் கூறியதாவது, நாகை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் சுர்ஜித்சங்கரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நாகையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையை மேம்படுத்துவார். அதுபோல் தஞ்சையில் இருந்து நாகை செல்லும் சாலை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தப்படும்.

 நாகை நாடாளுமன்ற தொகுதியில் விமான நிலையம் அமைக்கப்படும். மேலும் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ3000 வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும். நாகை நாடாளுமன்ற தொகுதி விவசாயமும், மீன்பிடி தொழிலும் நிறைந்து இருக்கக்கூடிய மாவட்டம்.

 காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலன் காக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். கடற் பகுதியில் மீனவர்களின் மீன்பிடி உரிமை உறுதிப்படுத்தப்படும். அதிமுக நான்கு எழுத்து, தேமுதிக நான்கெழுத்து, கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியும் நான்கெழுத்து. அதே போல் தேர்தல் முடிவு வரக் கூடிய நாளும் ஜூன் நான்காம் தேதி. இந்த பொருத்தம் வெற்றி பொருத்தமாகும்.

 அதிமுக தேமுதிக கூட்டணி வெற்றி கூட்டணி என்பதை எதிர்காலம் உணர்த்தும். கருத்துக்கணிப்புகளை தாண்டி 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,பாஸ்கர் கொரடாச்சேரி தெற்கு ஒன்றிய செயலாளர்,சேகர் கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர், செந்தில் கொரடாச்சேரி பேரூர் செயலாளர், வி.சண்முகராஜ் தேமுதிக திருவாரூர் மாவட்ட செயலாளர்,ஸி.பிரபாகரன் நாகை மவட்ட செயலாளர், ஸி.ரிவாசுதேவன் மாவட்ட கழக அவைத் தலைவர், ஹி.சண்முகம் மாவட்ட கழக பொருளாளர், யி.ஜெகதீசன் திருவாரூர் தொகுதி பொறுப்பாளர், சசிக்குமார் நன்னிலம் தொகுதி பொறுப்பாளர், முத்தையா தலைமை செயற்குழு உறுப்பினர், வி.ராஜபாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர், விஜயன் கொரடாச்சேரி தெற்கு ஒன்றிய செயலாளர், வீரையன்

கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.