கொலை செய்துவிட்டு சரணடைந்த ரவுடி!

கு.அசோக்,
பிரபல ரவுடி சரித்திர பதிவேடு குற்றவாளியின் மனைவியிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்த உறவுக்காரரை கழுத்தில் துண்டு போட்டு நெரித்து பாக்கெட் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை - கொலையில் ஈடுபட்ட காஞ்சிபுரம் ரவுடி காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் சரண்டர். இரவில் பரபரப்பான போலீஸ்..
இராணிப்பேட்டை மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், வெப்பேடு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி லூவியரசன். இவரது மனைவி கீர்த்தனா இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் லூயரசன் மீது காஞ்சிபுரம் மற்றும் பானாவரம் காவேரிப்பாக்கம் அரக்கோணம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் கொலை கொள்ளை உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
சரித்திர பதிவேடு குற்றவாளியும் ஆவார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த லூவி அரசனின் உறவினர் அருண்குமார் என்பவர் மனைவியான கீர்த்தனாவுக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த லூயரசன் ராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்று வரலாம் எனக் கூறி அருண்குமாரை இரு சக்கர வாகனத்தில் நேற்று இரவு அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆலப்பாக்கம் அருகே உள்ள தனியார் கல்குவாரி அருகே இருவரும் சென்று லூவியரசன் மது அருந்திய நிலையில் கோவிலுக்கு மாலை அணிந்து இருந்ததால் அருண் குமார் மது குடிக்கவில்லை என கூறப்படுகிறது.
ஏற்கனவே அருண்குமாரை கொலை செய்ய திட்டமிட்டு அழைத்து வந்த லூவியரசன் அருண்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதனையடுத்து துண்டால் கழுத்தை நெருக்கி பின்னர் கையில் வைத்திருந்த பாக்கெட் கத்தி மூலம் கழுத்து மற்றும் பல்வேறு பகுதிகளில் கிழித்துள்ளார்.
இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதனை அடுத்து இரவு ஒரு மணி அளவில் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த லூவியரசன் தான் அருண்குமாரை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தான்.
அவன் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த அருண்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவேரிப்பாக்கம் போலீசார் கொலை குற்றவாளியான லூயார்சனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். காவேரிப்பாக்கம் பகுதியில் ரவுடி ஒருவர் கொலை செய்து காவேரிப்பாக்கம் காவல் நிலைய சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.