நடமாடும் கால்நடை மருத்துவமனை! விசேஷ ஊர்தியை அறிமுகப்படுத்திய ஆட்சியர்!

கு.அசோக்,
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, குடியாத்தம் கால்நடை மருத்துவமனையில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவையதொடங்கி வைத்தார் - தட்டப்பாறையில் நடந்த மனு நீதி நாள் முகாமில் பங்கேற்று ஆட்சியர் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு பங்கேற்றார்.
வேலூர்மாவட்டம், குடியாத்தம் கால்நடை மருத்துவமனையில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இதை ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி துவக்கினார்.
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ்தொலை தூர கிராமங்களுக்கு கால்நடை மருத்துவ சேவை வழங்கிட நடமாடும் கால்நடைமருத்துவ ஊர்தி சேவை இன்று முதல் இயங்கி வருகின்றது.
குடியாத்தம் கால்நடை மருத்துவமனையை தலைமையிடமாக கொண்டுகுடியாத்தம், பேர்ணாம்பட்டு ஒன்றிய தொலைதூர கிராமங்களில் கால்நடை மருத்துவசேவைகளை வழங்குவதற்காக கால்நடை உபகரணங்கள், மருந்து பொருட்களைஉள்ளடக்கியதாக இந்த நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடைஉதவியாளர், ஒரு ஊர்தி ஓட்டுநரும் இருப்பர்.
இந்த ஊர்தியானது திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரண்டு கிராமங்களில் காலை8 மணி முதல் மதியம் 2 மணி வரை கால்நடை மருத்துவ முகாம் நடைபெறும். மதியம் 2 மணிமுதல் 5 மணி வரை கட்டணமில்லா தொலைபேசி 1962 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்விவசாயிகளின் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள் இதன் மூலம் கிராமப்புற ஏழை விவசாயிகள் பயனடைவார்கள்.
இதன் பின்னர் தட்டபாறை கிராமத்தில் நடந்த மனு நீதி நாள் முகாமிலும் ஆட்சியர் சுப்பு லெட்சுமி பங்கேற்று மக்களிடம் மனுக்களை பெற்றுகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் இவ்விழாவில் கால்நடைத்துறை துணை இயக்குநர் அந்துவன் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.