அய்யய்யோ ஆட்டோ ஓட்டுநர் வங்கிகணக்கில் 9 ஆயிரம் கோடி! அரை மணி நேரத்தில் கரைந்து சோகம்! தொடை நடுங்கிய டி.எம்.பி. வங்கி அதிகாரிகள்!

உ.சசிகுமார்,
ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனது, ஒரு அரை மணி நேரம் நடைமுறையிலிருந்த அந்த பணம் மீண்டும் அவரது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது.
இது குறித்த விவரம் வருமாறு,
சென்னை, கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜ்குமார். அவரது சொந்த ஊர் பழனியை அடுத்துள்ள நெய்காரன்பட்டியாகும். அன்றாடம் வண்டி ஓட்டி பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தார். இந்நிலையில் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அவரது செல் எண்ணுக்கு ஒரு மெஸேஜ் வந்திருக்கிறது.எடுத்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. காரணம் 9 பக்கத்துல பத்து பூஜ்ஜியம் போட்டு இருந்தது. இது முதலில் அவரது ஸ்டேட் வங்கி கணக்கில் காட்டவில்லை. அவரது அக்கவுண்டில் வெறும்15 ரூபாய் இருந்த நிலையில் இது எப்படி வந்தது என அதிர்ந்தார்.
உடனே அவரது அக்கவுண்டில் இருந்து முதலில் ஆயிரம் ரூபாயும் பின்னர் அடுத்தடுத்து இருமுறை தலா பத்தாயிரம் என மொத்தம் 21 ஆயிரத்தை நண்பர்களுக்கு அனுப்பினார். அப்போதுதான் தெரிந்தது தனது வங்கியில் 9 ஆயிரம் கோடி வந்திருக்கிறது என்று.
உடனே தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் பழனி கிளையிலிருந்து ராஜ்குமாருக்கு ஒரு மெஸேஜ் வந்தது. அதில் நாளை காலைக்குள் 21 ஆயிரத்தை மெர்கன்டைல் வங்கியில் செலுத்துங்கள் என்று சொல்லப்பட்டிருந்தது.
இடையே அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட 9-ஆயிரம் கோடி ரூபாய் காணாமல் போனது.
பின்னர் அவரது செல்லுக்கு ஒரு அழைப்பு வந்தது, அழைத்தவர் 21 ஆயிரம் ரூபாவை உடனே செலுத்து இல்லையென்றால் போலிசில் புகார் அளிப்போம் என்று அந்த குரல் சொன்னது. ஆனால் அசராத ராஜ்குமார் நீங்க என்ன போலிசுக்கு போவது நானே போகிறேன் என்று சொன்னதும், போனில் பேசியவர் ஆடிவிட்டார்.
மேலும் ராஜ்குமார் இது தொடர்பாக வழக்கறிஞரின் உதவியை நாட அவரோ இது என்னடா இது பூதக்கதையாக இருக்கிறதே என்று இந்த மேட்டரில் இருந்து எகிறிவிட்டார்.
அதன் பின்னர் கூலான வங்கியாளர்கள், ராஜ்குமார் ப்ளீஸ் இது ஒரு அதிகாரியின் வாழ்க்கை பிரச்சனை, தவறுதலாக உங்க கணக்கில் பணம் வந்துவிட்டது. நீங்க பிரச்சனை ஒன்றும் செய்ய வேண்டாம். உங்களுக்கு வாகன கடன் வழங்குவதாகவும் சமரசம் பேசியுள்ளனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் இது ரிசர்வ் வங்கியின் பார்வைக்கு செல்லும் என்பதில் அய்யமில்லை. ஏனெனில் இது 9 ஆயிரம் கோடி பணபரிவர்த்தனை அல்லவா?
குறிப்பு:- ஏற்கனவே பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த டாக்சி டிரைவர் வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.9,800 கோடி பதிவு செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்டியாலா: பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த டாக்சி டிரைவர் பல்வீந்தர்சிங். இவர், பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த ஏழைகளுக்கான ஜனதன் வங்கி கணக்கை தொடங்கி இருந்தார். இந்த வங்கி கணக்கில் ரூ.3 ஆயிரம் பணம் போட்டு வைத்திருந்தார். இந்த நிலையில் அவரது பாஸ்புக்கை வங்கியில் கொடுத்து பதிவு செய்ய கூறினார். அப்போது அவரது கணக்கில் ரூ.9 ஆயிரத்து 805 கோடியே 95 லட்சத்து 12 ஆயிரத்து 231 இருப்பதாக பதிவு செய்து கொடுத்தனர். நமது வங்கி கணக்கில் இவ்வளவு பணமா? என ஆச்சரியம் அடைந்த அவர், இதுபற்றி வங்கி அதிகாரியிடம் தெரிவித்தார். அதன் பிறகுதான் தவறு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்து.
அதே போல் ஆம்பூரில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து ஏழை மாணவர் ஒருவருக்கு 100 கோடி டெபாசிட் ஆன சம்வமும் உண்டு.