அ.தி.மு.க. - பா.ஜ.க.கூட்டணி முறிவா இல்லையா? தன்மானத்தை கேள்விக்குறியாக்கும்போது பதில் பேசுவேன் அண்ணாமலை ஆவேச பேட்டி!

அ.தி.மு.க. - பா.ஜ.க.கூட்டணி முறிவா இல்லையா? தன்மானத்தை கேள்விக்குறியாக்கும்போது பதில் பேசுவேன் அண்ணாமலை ஆவேச பேட்டி!

  ம.பா.கெஜராஜ்,

   பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். இது குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், கூட்டணி குறித்து வெளிப்படையில் பேச வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வாய்மொழி உத்தரவிட்டு மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில்தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் பாத யாத்திரையை தொடங்கினார்.¢. அதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

   அப்போது அவர் கூறியதாவது:-  மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறோம். ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதால் அனைத்து கட்சிகளுக்கும் பாராட்டு.  ஒரு எம்.பி. 22 லட்சம் மக்களை கையாள்வது எளிதாக விசயம் கிடையாது. மக்கள் தொகையை மட்டுமே வைத்து தொகுதி வரையறை இருக்கக்கூடாது. அதில் பல்வேறு காரணிகள் இருக்க வேண்டும். என்னை பொறுத்த வரையில் எனக்கும், அதிமுக-வுக்கும் இடையில் பிரச்சனை இல்லை. தமிழக பா.ஜனதாவுக்கும்- அதிமுக-வுக்கும் இடையில் பிரச்சனை இல்லை. இதில் தெளிவாக இருக்கிறோம்.  அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும், எனக்கும் பிரச்சனை இருக்கலாம். ஏனென்றால் அவர்களுடைய பேச்சை வைத்து சொல்கிறேன்.

  என்.டி.ஏ. கூட்டணியின் முக்கிய புள்ளியே பிரதமர் மோடிதான். அவரை 3-வது முறையாக பிரதமராக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் நோக்கம். இதை அதிமுக ஏற்றுக் கொள்கிறது.  மத்தியில் பிரதமர் மோடியையும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியையும் அறிவிக்க வேண்டும் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதைப்பற்றி தேசிய தலைவர்கள் கூற வேண்டும். நான் யாரையும், எங்கேயும் தவறாக பேசவில்லை. என்னைப் பற்றி வரும் விமர்சனம் மற்றும் கருத்துக்கு பதில் அளிக்கமாட்டேன். ஆனால், என்னுடைய தன்மானத்தை கேள்விக்குறியாக்கும்போது பதில் பேசுவேன். நாளைக்கும் பேசுவேன். நாளைக்கு அடுத்த நாளும் பேசுவேன். அடுத்த வாரமும் பேசுவேன்.

   தன்மாத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்ய நான் இங்கே வரவில்லை. அதில் தெளிவாக இருக்கிறேன். தன்மானம் முக்கியம். அதன்பின்தான் அரசியல். தன்மானம் விசயத்தில் பதில் அளிப்பது என்னுடைய கடமை மட்டுமல்ல. அது உரிமையும் கூட.

  அவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்லும் நிலைமையில் இல்லை. பதில் சொல்லவும் முடியாது. செல்லூர் ராஜூ பேசியதற்கு நான் எப்படி பதில் சொல்வேன். நான் பதில் சொல்ல முடியாது. தேசிய தலைமை, தேசிய தலைவர்கள் சொல்ல வேண்டும்.

 அதேபோல் அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் பேசியுள்ளனர். அதற்கும் மத்தியில்தான் பதில் சொல்ல வேண்டும். யாரெல்லாம் மோடியை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் அனைவரும் ஒரு மையப்புள்ளியில் இணைய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.  தமிழகத்தில் தலைவர்களிடையே உள்ள கருத்து வேறுபாட்டிற்கு காரணம், ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி சித்தாந்தம் உள்ளது. ஒவ்வொரு கட்சியின் சித்தாந்தமும் வேறுவேறு. அதனால் இதுபோன்ற மோதல் வருவது சகஜம்தான்.  அதிமுக கட்சி 1972-ல் உருவான சரித்திரம் வேறு. சனசங்கம் 1950 காலக்கட்டத்தில் உருவான கருத்து வேறு. 1980-ல் பா.ஜனதா கட்சியாக மாறிய சரித்திரம் வேறு. எல்லா பிரச்சனைகளையும், விசயங்களையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

   அறிஞர் அண்ணாவை நான் எங்கேயும் விமர்சித்தது கிடையாது. சனாதன தர்மம் விவகாரத்தில் பா.ஜ.க. போன்று அதிமுக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் குரலும், திமுகவின் குரலும் ஒரே குரல்தான். அதில் எந்த மாறுபாடும் இல்லை. காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த சட்டத்தையே, அவர்கள் ஆதரித்து என்று பேசுவதில்லை. திமுக சொன்னால் சரி என்று கேட்டுக்கொள்கிறது. தேசிய கட்சிகள் அனுகக்கூடிய பிரச்சனைகளில் ஒரு விசத்தியாசம் உள்ளது. இதனால் தனிப்பட்ட முறையில் எனக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையில் பிரச்சினை இல்லை என்று சொன்னார்.