நண்பரை கொல்ல பத்து லட்சம் டீல் பேசிய கூலிப்படைத் தலைவன்! வாணியம்பாடியில் களம் இறங்கிய டிஐஜி.ஏ.ஜி.பாபு! தனிக்கப்பட்ட பதற்றம்!

நண்பரை கொல்ல பத்து லட்சம் டீல் பேசிய கூலிப்படைத் தலைவன்!   வாணியம்பாடியில் களம் இறங்கிய டிஐஜி.ஏ.ஜி.பாபு! தனிக்கப்பட்ட பதற்றம்!
நண்பரை கொல்ல பத்து லட்சம் டீல் பேசிய கூலிப்படைத் தலைவன்!   வாணியம்பாடியில் களம் இறங்கிய டிஐஜி.ஏ.ஜி.பாபு! தனிக்கப்பட்ட பதற்றம்!

ம.பா.கெஜராஜ், டி.இ.முகமது,

 அரசியல்வாதியும்,சமூக சேவகருமான வசீம் அக்ரம் என்பவரை வாணியம்பாடியில் கூலிப்படையினர் வெட்டிக்கொலை செய்த சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இது கடந்த 2015 ஆம் ஆண்டு ஆம்பூரில் நடந்த வன்முறை போல் மாறுமோ என்கிற அச்சம் உருவானது.

 

 இதை தவிர்க்க நேரடியாக களமிறங்கி பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட்டார் வேலூர் சரக டி.ஜ.ஜி யான ஏ.ஜி. பாபு.

 

  வேலூர் எஸ்.பி.செல்வக்குமார், மற்றும் ஒரு ஏ.டி.எஸ்.பி, ஆறு டி.எஸ்.பிக்கள், பதினைந்து ஆய்வாளர்கள், நாற்பது உதவி ஆய்வாளர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பதற்றத்தை கட்டுபடுத்தினர்.

 

 இந்நிலையில் மேற்படி வாணியம்பாடியில் மா.ஜ.க. முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டதற்கு அவரது நண்பர் இம்தியாஸ் என்கிற டீல் இம்தியாஸ் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

 

விவரம் வருமாறு,

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்து வந்தவர் வசீம் அக்ரம் (43). இவர் மனித நேய ஜனநாயக கட்சியில் முன்னாள் மாநில துணை செயலாளராக இருந்தவர்.

 

 சமூக ஆர்வலரும் ஆவார். அத்துடன் வாணியம்பாடி நகர் இஸ்லாமிய கூட்டு இயக்கத்தில்  உறுப்பினராக இருந்த வசீம் அக்ரம் ஜீவா நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு   சென்று தொழுகை முடித்து விட்டு தனது 7 வயது குழந்தை உடன் வீட்டு திரும்பி கொண்டு இருந்தார்.

  அப்போது சுமார் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து வெட்டி சாய்த்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இருந்த மக்கள் அலறி அடித்து ஓடினார்கள். பின்னர் குற்றவாளிகள் காரில் ஏறி தப்பி சென்றனர். தகவலின் பேரில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கொலை செய்யப்பட்டவரின் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

  பின்னர் வேலூர் சரக டி.ஐ.ஜி.யான ஏ.ஜி.பாபு இ.கா.ப மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூடுதல் பொறுப்பு வேலூர் எஸ்.பி.யான எஸ். செல்வகுமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

  இதனை தொடர்ந்து கொலையாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டுமென திருப்பத்தூர்- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

 

  இதனால் வாணியம்பாடி பேருந்து நிலையம்  மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் முடப்பட்டன பதட்டம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டனர்.

 

   பின்னர் 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க டிஐஜி உத்தரவிட்டார்.

 

  இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் அருகே பாலு செட்டி சத்திரம் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரில் இருந்து சிலர் இறங்கி தப்பி ஓடுவதை கண்ட போலீஸார் அந்த காரை மடக்கி நிறுத்தினர்.

 

  அதில் இருந்த வண்டலூர் அடுத்த ஓட்டேரி, அறிஞர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்கின்ற ரவி, வண்டலூர் பகுதியை சேர்ந்த டில்லி குமார் ஆகிய இருவரையும் பிடித்தனர். மற்ற சிலர் தப்பினர்.

   பிடிபட்டவர்களில் ஒருவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாணியம்பாடியில், டீல் இம்தியாசின் கைக்கூலியாக செயல்பட்டு வந்துள்ளார்.

 

  மேற்படி வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் டீல் இம்தியாஸ். சென்னையில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடந்த 26.7.2021ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது.

 

  அதன் பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தி தலைமையில் 20 பேர் கொண்ட போலீஸார் திடீரென வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் உள்ள இம்தியாஸ் வீடு மற்றும் அலுவலகத்தில் நுழைந்த சோதனை மேற்கொண்டனர்.

 

 அப்போது அலுவலகத்தில் மறைத்து வைத்திருந்த சுமார் 3 லட்சம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சா, 10 பட்டாக்கத்திகள்,10 செல்போன்கள்  பறிமுதல் செய்து அலுவலகத்தில் இருந்த ரஹீம், பசல், சலாவுதீன் மற்றும் கரன்குமார் ஆகிய 4 பேரை  கைது செய்தனர்.

 

  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வஹா உத்தரவின்பேரில் வருவாய்த்துறையின் இம்தியாஸ் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

மேலும், மாவட்ட தனிப்பிரிவு காவலர்கள் 10 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

 இந்த சம்பவத்தில் தலைமறைவான டீல் இம்தியாஸை தனிப்படை போலிசார் தேடி வந்தனர். ஆனாலும் அவரை கைது செய்ய இயலவில்லை. இதற்கு முருகனின் மறு பெயர் கொண்ட ஒரு போலிஸ்காரரே காரணம் என்று கூறப்படுகிறது.

  

  மேலும், கஞ்சா மேட்டரை போலிசுக்கு வசீம் அக்ரம் தான் போட்டுக் கொடுத்தார் என்றும் மேற்படி போலிஸ் நபர்தான் இம்தியாஸிக்கு சொன்னாராம்.

 

  இதன் காரணமாகவே வசீம் மீது கொலைவெறி ஏற்பட்டது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

 

 ஆம், கஞ்சா வியாபாரி இம்தியாஸ் சொல்லி தான், வசீம் அக்ரமை கொலை செய்ததாக பிடிபட்ட பிரசாத் (எ) ரவி, மற்றும் டில்லி குமார் ஆகியோர் போலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

 

குறிப்பு. கொலையான வசீம் அக்ரமும், அவரை கொலை செய்ய காரணமான டீல் இம்தியாஷிம் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 தினமும் சந்தித்து பேசிக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்த அவர்கள் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் நரி நஹீம் என்பவருக்கு ஆதரவாக ஒன்றாக இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

 இந்நிலையில் வசீம் போலிசில் தன்னைக் காட்டிகொடுத்ததாக கிடைத்த தகவலை நம்பிய டீல் இம்தியாஸ் வண்டலூர் பகுதியின் பிரபல கூலிப்படைத் தலைவன் சீஸிங் ராஜா மற்றும் செல்லாவை தொடர்பு கொண்டு கொலைக்கான சதி தீட்டியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

 இந்த கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மாருதி எர்டிகா வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த வண்டியின் பின்னால் வந்த வெள்ளை நிறம் வாகனமும் விசாரணை வளையத்தில் சிக்கியது.

 

 இந்த கொலைக்கு காரணமானவர்கள் என ஓட்டேரி செல்லா, எபி, ராஜன், மினிஸ்,பிரவின், கதிர் (செந்த ஊர் சிதம்பரம்,) பிடிபட்ட டில்லி குமார், பிரசாந்த், மண்ணிவாக்கம் சத்யா,அகஸ்டின் என்றும், மேலும் மற்றொரு காரில் வாணியம்பாடியைச் சேர்ந்த டீல் இம்தியாஸ், யூசுப், அலி, மற்றும் நித்யா ஆகியோர் வந்தத்தையும் போலிசார் கண்டறிந்துள்ளனர்.

 

  மேலும் இந்த கொலை தொடர்பாக ஓட்டேரி செல்லாவிடம், வாணியம்பாடி இம்தியாஸ் போனில் டீல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கூலிப்படைக்கு 10 லட்சம் ரேட் பேசியதாகவும் தெரிகிறது

 

   சென்னையில் ரவுடிகளின் கொட்டம் அடக்கப்பட்டு வருவதால், தற்போது சென்னை, செங்கல்பட்டு எல்லையில் கூலிப்படையினர் டேரா அடித்துள்ளார்கள்.

 

 மேலும் ஓட்டேரி, மண்ணிவாக்கம், ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளில் ரேட்டுக்கு தகுந்தாற்போல் கூலிப்படையினர் உள்ளனர்.

 

 ஊரப்பாக்கத்தில் மட்டும் மூன்று பஞ்சாயத்து தலைவர்களை வரிசையாக வெட்டி கொலை செய்துள்ளனர். அந்த அளவுக்கு அங்கு கூலிப்படையின் கை அங்கு ஓங்கியிருக்கிறது.

 இங்குள்ள கேங், அவர்கள் பிறந்த நாள் கேக்கையே பட்டா கத்தியில் வெட்டி கொண்டாடும் ரகத்தினர் ஆவர்.

 

  திருடு மற்றும் கொலை ஆகியவைகளுக்கு பெயர் பெற்ற திருச்சி ராம் நகர் போல, சென்னைக்கு வால் பகுதியில் உள்ள மண்ணிவாக்கமும், ஓட்டேரி மற்றும் ஊரபாக்கம் ஆகிய பகுதிகள் கூலிப்படைக்கு பெயர் பெற்றுவிட்டது கொடுமை.