வேலூர் டிஐஜி உட்பட 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

Ma.ba.Gajaraj,
19 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.
மகேஷ் குமார், தேவராணி, இ.எஸ்உமா, ஆர் திருநாவுக்கரசு, ஆர் .ஜெயந்தி, ஜி. ராமர் உள்ளிட்டா பத்து ஐபிஎஸ் அதிகாரிகள் டிஐஜி யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அதேபோல் ஆனந்தகுமார் சோமானி, தமிழ்ச்சந்திரன் ஆகிய இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
எம்.எஸ். முத்துசாமி ,ஜெயஸ்ரீ ,சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், மயில்வாகனன் ஆகியோர் ஐஜி ஆகபதவி உயர்வு பெற்றுள்ளனர்.