பிரபல கருணா சுவீட்ஸ் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு! ஊழியர் காயம்!

ஜி.கே.சேகரன்,
"லைவ் லுக்" சார்பில் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் பிரபல கருணா சுவீட்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலிசார் தேடி வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் ஆம்பூர் வலயல்கார தெரு பகுதியை சேர்ந்த தமிழருவி என்பவருக்கு சொந்தமான சுவீட் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு 11 மணிக்கு திடீரென இருசக்கர வாகனத்தில் மாஸ்க் அணிந்து வந்த 3 மர்ம நபர்கள் தயாராக கையில் கொண்டு வந்திருந்த ( பாட்டிலில் பெட்ரோல் நிரப்பிய) பெட்ரோல் குண்டுகளை பற்ற வைத்து கடைக்குள் சென்று வீசி உள்ளனர்.
மூன்றுக்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டுகள் கடையில் வீசப்பட்ட நிலையில் அதில் ஒரு பெட்ரோல் குண்டு மட்டும் வெடித்து சிதறியுள்ளது, மீதமுள்ள இரண்டு பெட்ரோல் குண்டுகள் வெடிக்கவில்லை.
அப்போது கடையில் ஊழியர் ஒருவர் மட்டுமே இருந்த நிலையில் அதை தடுக்க முயன்ற போது அவரை மிரட்டி அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். கடையில் தீப்பற்றி எரியவே கடையில் இருந்த ஊழியர் நந்தகுமார் தீயை அணைக்க முயன்ற போது லேசான தீக்காயம் அடைந்துள்ளார்.
இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் பல ஆயிரம் மதிப்பிலான பொருட்கள்.எரிந்து நாசமானது அதிர்ஷ்டவசமாக சேதம் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து வாணியம்பாடி நகர போலீஸார் சுவீட் கடையில் பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்மநர்கள் குறித்து சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.