வேலூர் டிஐஜி உட்பட தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் டி.ஐ.ஜியாக இருந்தவர் சரோஜ் குமார் தாகூர். இவர் உட்பட மொத்தம் 17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் கிடைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சரோஜ்குமார் தாகூர் சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்
அவருக்கு பதிலாக வேலூர் சரக டி.ஐ.ஜியாக தேவராணி அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் வடசென்னையில் போக்குவரத்து இணை ஆணையராக இருந்தவர்.
திருநெல்வேலி டி.ஐ.ஜி பர்வேஷ்குமார் வட சென்னை இணை ஆணையராக மாற்றப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக சைலேஷ்குமார் யாதவ் நியமனம்.
ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம்.
மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம்.
சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம்.
ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமனம்.
மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் நியமனம்.
மேற்கு மண்டல ஐஜியாக இருந்த புவனிசுவாய், காவல் தலைமையிட ஐஜியாக நியமனம்.
சாமுண்டீஸ்வரி சோசியல் ஜஸ்டிஸ் ஹியூமன் ரைட்ஸ் பிரிவிலிருந்து டிஜிபி அலுவலகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தினகரன் சி ஐ டி பிரிவிலிருந்து அதே சி ஐ டி பிரிவுக்கு கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பவானிஸ்வரி மேற்கு மண்டல ஐஜி பதவியில் இருந்து சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் அவர்கள் பிறப்பித்துள்ளார்.