போலீசாரை ஆபாசமாக பேசிய வழக்கறிஞர் பிடிபட்டார்! எஸ்பிக்கு நன்றி சொல்லும் போலீசார்!

போலீசாரை ஆபாசமாக பேசிய வழக்கறிஞர் பிடிபட்டார்! எஸ்பிக்கு நன்றி சொல்லும் போலீசார்!

ஜி.கே.சேகரன்,

போலீசாரை ஆபாசமாக பேசிய வழக்கறிஞர் தலைமறைவாக இருந்த நிலையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் பிடிபட்டார். திண்டுக்கல் மாவட்டம் பழனி வரை தேடிச் சென்று அவரை பிடித்த இன்ஸ்பெக்டர் பேபி தலைமை தானே போலீசாருக்கு சக போலீசார் பாராட்டுகளை தெரிவித்திருப்பதுடன், இதற்காக முழு மனதுடன் ஒத்துழைத்த மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மோசடி ஆவணங்கள் மூலம் காரை அபகரித்த  வழக்கில் கைதான இருவருக்கு ஆஜரான வழக்கறிஞர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசியதால் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்  வழக்கறிஞர் சுரேஷ் என்பவர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை ஆபாசமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்ததாக வீடியோ வைரலானது.

மோசடி செய்த கார்மெக்கானிக் உட்பட 2 பேரை கைது செய்து  ஜே எம் 1 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து வந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்புக்கு திருப்பத்தூர் சக்தி நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (43) என்கிற வழக்கறிஞர்  வந்திருந்தார்.

அப்போது அவர், தமது கிளையன்ட் இடம் வழக்கு குறித்து பேசி இருக்கிறார். 

 போலீஸ் பொய் வழக்கு போடுகிறார்கள், எனக்கு உடல்நிலை சரியில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறும்படி சொல்லி கொடுத்து வந்துள்ளார். 

அதற்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரப்பட்ட வழக்கறிஞர் போலீசாரை ஆபாசமாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்தார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

வழக்கறிஞர் சுரேஷ் குமார் போலீசாரை தகாத வார்த்தையால் பேசிய விவகாரத்தில் அவர்மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல், ஆபாச வார்த்தை பேசியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் அவரை போலிசார் வலை வீசி தேடி வந்தனர்.

 இந்நிலையில்வழக்கறிஞர் சுரேஷ் பழனியில் தலைமறைவாக இருந்தபோது பிடிபட்டார். 

 எந்த நீதிமன்றத்தில் ரகளை செய்தாரோ அதே நீதிமன்றத்தில் ரிமாண்டுக்கு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

எங்களைப் பார்த்தால் இளக்காரமாக உள்ளதா! வழக்கறிஞரின் ஆபாச பேச்சால் திருப்பத்தூர் போலிசார் வேதனை! இருதரப்பிலும் புகார்...வழக்கு!!

போலீசார் மகிழ்ச்சி. 
மேற்படி போலீசாரை வழக்கறிஞர் ஆபாசமாக திட்டிய நிலையில் போலீஸ் வட்டாரத்தில் கடும் கோபத்தை காண முடிந்தது.

 இந்நிலையில் சுரேஷ் வழக்கறிஞர் சிறைக்கு அனுப்ப பழனி வரை தேடிச்சென்று பிடித்து வந்த நமது காவல் சொந்தங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

மேலும் காவலர்கள் மனநிலை கருத்தில் கொண்டு காவலர்களிடம் தவறாக நடந்து கொண்ட வழக்கறிஞர் சிறைக்கு அனுப்புவதில் தீவிரமாக இருந்த காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு காவலர்கள் சார்பாக மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று காவல்துறையினர் வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாறி வருகிறார்கள்.