சாகச பேருந்து பயணம் செய்யும் கிராமத்து மாணவர்கள்!

சாகச பேருந்து பயணம் செய்யும் கிராமத்து மாணவர்கள்!

 சுகன்யா முரளிதரன்,

 மாணவர்களின் எதிர்கால கல்வியை மனதில் கொண்டு பள்ளிக்கூடங்களை திறந்திருக்கிறது அரசு. கொரோனா காலத்தில் இது ரிஸ்க் எடுக்கும் சமாச்சாரம் தான் என்பதில் அய்யமில்லை.

 இருந்த போதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலுவலர்கள் சினிசியராக பணியாற்றி வருவதைக் காணமுடிகிறது.

 இருந்த போதும், மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்று வர போதுமான பேருந்துகள் இயக்கபடவில்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக உள்ளது.

 குறிப்பாக போதிய பேருந்து வசதியின்றி தவிக்கும் கிராமத்து மாணவர்கள், பள்ளிக்கூடம் செல்ல உயிரைப் பணையம் வைக்க வேண்டியதாக உள்ளது. பேருந்துகளின் டாப் மற்றும் ஏணிப்படிகளில் தொற்றிக் கொண்டு பள்ளிக்கூடம் செல்கிறார்கள்.

 உதாரணத்துக்கு தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியிலிருந்து கம்பம் செல்லும் பேருந்தில் நமது செய்தியாளார் கண்ட காட்சிகளை படமாக்கியுள்ளதை சுட்டிக்காட்டலாம்.

 அங்குமட்டுமல்லாது  தமிழகத்து கிராமங்கள் பலவற்றில் இப்படித்தான் நிலமை உள்ளது.

  தமிழக அரசு மாணவர்களுக்கு இலவச பயண அட்டை வழங்கியுள்ளதால் கிராம பகுதி மாணவர்கள் அரசு பேருந்துகளில் அதிகம் பயணிக்கிறார்கள்.

 ஆக, பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களின் உயிர்க்கு முக்கியத்துவம் தந்து, பள்ளிக்கூட நேரத்தில் அதிக பேருந்துகளை இயக்க வேண்டும் என தமிழக அரசிற்கு பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.