75 குரங்குகளை இதுவரை அடக்கம் செய்த இளைஞர்கள்!

ஜி.கே.சேகரன்,
ஊருக்குள் உணவு தேடி வந்த குரங்கு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிலையில் அதனை மனிதர்களை அடக்கம் செய்வதை போல் நல்லடக்கம் செய்த மக்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, பெருமாள்பேட்டை கூட்டு சாலை பகுதியில் ஊருக்குள் உணவு தேடி குரங்கு வந்தது.
அங்கு வந்த அந்த குரங்கு மரத்தில் தாவும் மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது.
இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் உயிரிழந்த குரங்கினை மீட்டு மனிதர்களுக்கு செய்யும் சடங்குகள் போன்று செய்து அங்குள்ள அனுமன் கோயில் பின்புறம் நல்லடக்கம் செய்துள்ளனர்.
வாணியம்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் இது விபத்தில் பலியாகும் குரங்குகளை மீட்டு அனுமன் கோயில் பின்புறம் நல்லடக்கம் செய்து வந்ததாகவும் தற்போது இறந்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள 75 ஆவது குரங்கு எனவும் அப்போது மக்கள் தெரிவித்தனர்.
வாய்யில்லா ஜீவனுக்கு செலவு செய்து நல்லடக்கம் செய்த இளைஞர்களை அப்பகுதி மக்கள் மற்றும் வன ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.