அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்ற மனித சங்கலி!

ஜி.கே.சேகரன்,
இராணிப் பேட்டையில் போதைப் பொருட்களுக்கு எதிரான மனித சங்கிலி விழிப்புணர்வு நடைபெற்றது, அதில் பள்ளி மாணவ மாணவிகளுடன் அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்றார்.
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை நகராட்சி எதிரே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் வெளியே மாவட்ட பாஸ்கர பாண்டியன் தலைமையில் போதை பொருள் குறித்த மனித சங்கிலி நடைபெற்றது.
இதில் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்துகொண்டு அரசு பள்ளி மாணவ மாணவிகளுடன் போதைப் பொருள் எதிரான மனித சங்கிலியை கைகோர்த்து தொடங்கி வைத்தார்.
மேலும் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் மனித சங்கலி கோர்த்து போதைப் பொருட்களுக்கு ஏதிரான பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.