நேற்று விசிக நிர்வாகி இன்று பாஜக நிர்வாகி கொலை!

காஞ்சி.கோட்டி,
நாளுக்கு நாள் தமிழகத்தில் கொலைகள் அதிகரித்து வருகிறது, அரசியல்வாதிகள் தொடங்கி அரசு அலுவலர்கள் என கொலைப்பட்டியல் நீளுகிறது.
இந்நிலையில் நேற்று சென்னையில் விசிக நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும் பா.ஜனதா எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாநில பொருளாளருமான பி.பி.ஜி.சங்கர் நேற்று இரவு பூந்தமல்லி அரிகே உள்ள நசரத்பேட்டை சிக்னல் அருகே வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக சென்னை எழும்பூர் 13-வது கோர்ட்டில் இன்று மதியம் 9 பேர் சரண் அடைந்தனர். அவர்களில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரும் உள்ளார்.
சரண் அடைந்த 9 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இதற்கிடையே சங்கரின் உடல் வைக்கப்பட்டுள்ள கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பா.ஜனதா கட்சியினரும், அவரது ஆதரவாளர்களும் இன்று மதியம் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக பாஜகவின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார்.