ஒரே பாடத்துக்கு இரண்டு மதிப்பெண்கள்:- அறிவுஜீவிகளின் தலையில் அரசு கொட்டு வைக்கலாமே!!

கு.அசோக்,
திருவள்ளூவர் பல்கலைக்கழக முதுகலை பாடப்பிரிவுகள் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் சான்றுகளில் ஒரு பாடப்பிரிவுகள் இரண்டு முறை அச்சிடப்பட்டு வெவ்வேறு மதிப்பெண்கள் ஒரே பாடத்திற்கும் முடிவுகளாக வந்ததால் மாணவர்கள் குழப்பம் - தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி.
வேலூர்மாவட்டம்,சேர்க்காட்டில் தமிழக அரசுக்கு சொந்தமான திருவள்ளூவர் பல்கலைக்கழகம் உள்ளது வேலூர்,திருவண்ணாமலை,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 80 கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் கீழாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இப்பல்கலைக்கழகத்தில் குளறுபடிகளும், பிரச்சணைகளும் நடந்து வருவது வாடிக்கை. அதிலும் குறிப்பாக தேர்வு நடந்து அதன் முடிவுகளில் குளறுபடி நடக்கும்.
அதே போன்று இந்த ஆண்டும் எம்.காம்.,எம்.எஸ்.சி, எம்.ஏ போன்ற முதுலை தேர்வுகள் வெளியானது.
இதில் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களில் ஒரே பாடப்பிரிவுகள் இரண்டு முறை அச்சிடப்பட்டு அந்த ஒரே பாடப்பிரிவிற்கு முதலில் 76 மதிப்பெண்களும் மற்றும் 62 மதிப்பெண் என இரு வேறு மதிப்பெண்கள் ஒரே பாடப்பிரிவிற்கு வழங்கப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ஒரே பாடப்பிரிவு குறியீட்டு எண்ணில் இரண்டு வேறுபட்ட மதிப்பெண்கள் வந்துள்ளதால் மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.
இதில் எது உண்மையான மதிப்பெண்? ஒரு பாடத்துக்கு இரண்டு முறை மதிப்பெண் வெவ்வேறாக வந்துள்ளது, இதில் எதனை கணக்கில் எடுத்துகொள்வது என்ஏஉ குழம்பிவிட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் குளறுபடி முடிவு வெளியிடும் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் இனிமேலாவது குளறுபடிகள் இல்லாமல் ரிசல்ட்டை வெளியிடுமா என்பது சந்தேகமே?
ஆகவே, இது போன்று மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் மேற்படி பல்கலையின் அறிவு ஜீவிகளை அரசும் உயர் கல்வித்துறையும் அடையாளம் கண்டு அவர்கள் தலைமீது ஒரு கொட்டு வைக்க வேண்டும் என்று இரட்டை மதிப்பெண் பெற்ற மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்ப்பார்க்கின்றனர்.