இலங்கைதமிழர்களுக்கு புதிய வீடுகள்! முதலமைச்சர் வழங்குகிறார்!

ஜி.கே.சேகரன்,
மேல்மொனவூர் இலங்கை தமிழர் பகுதியில் புதியதாக கட்டிடப்பட்ட வீடுகளை வரும் 17 ஆம் தேதி தமிழக முதல்வர் பயனாளர்களிடம் வழங்கவுள்ள நிலையில் சிறுபான்மை நலத்துறை மற்றும் அயல் நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு - இரண்டாம் கட்டமாக 3700 இலங்கை தமிழர் வீடுகள் கட்டும் பணிகள் துவங்கபடவுள்ளது அரசு தொடர்ந்து இலங்கை தமிழர்கள் நலனில் அக்கறை காட்டுகிறது அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி.
வேலூ£ர் மாவட்டம், மேல்மொனவூரில் உள்ள இலங்கை தமிழர் பகுதியில் புதியதாக அரசின் சார்பில் வீடுகள் கட்டப்பட்டு பணிகள் முடிந்துள்ளது. இதனை வரும் 17 ஆம் தேதி முதல்வர் பயனாளிகளுக்கு வழங்கவுள்ளார் இந்த நிலையில் இன்று சிறுபான்மையினர் மற்றும் அயலக வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமா£, ப.கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
பின்னர் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் அயலக வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இலங்கை தமிழர் முகாம்களுக்கு முதற்கட்டமாக ரூ.176 கோடி மதிப்பீட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளது. 13 மாவட்டங்களில் 19 முகாம்களில் 1800 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு அதனை தமிழக முதல்வர் நேரடியாக மேல்மொனவூரில் திறந்து வைக்கவுள்ளார்கள் இரண்டாம் கட்டமாகவும் வீடுகள் கட்டும் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.
இரண்டாம் கட்டமாக இந்த ஆண்டு 3700 வீடுகள் இலங்கை தமிழர்களுக்காக கட்டபடவுள்ளது இலங்கை வாழ் தமிழர் முகாம்களில் அடிப்படை வசதிகள் கட்டமைப்புகளோடு பணிகள் நடக்கிறது என கூறினார்