மாணவன் தற்கொலைக்கு காரணமான தலைமை ஆசிரியர் கைது செய்யப்படுவாரா?

ஜி.கே.சேகரன்,
நாட்றம்பள்ளி அருகே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை தலைமை ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான். காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே. பந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்த காந்தி என்பவரின் மகன் யுவராஜா ( 14) என்ற பள்ளி மாணவன் பத்தாம் வகுப்பு செல்கிறான். காந்தி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று யுவராஜாவை தலைமை ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது, அதனால் மனமடைந்த யுவராஜா நேற்று விஷம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்று ள்ளார்.
அதனைப் பார்த்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் யுவராஜாவை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மாணவன் யுவராஜாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனின் பெற்றோர் மற்றும் பள்ளியிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாணவனின் தற்கொலைக்கு காரணமான தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் உறவினர்களும் கூறி வருகின்றனர் அவர் கைது செய்யப்படுவாரா என்பது தான் தற்போது கேள்வி.