அதிமுக கவுன்சிலர் வார்டுகள் புறக்கணிப்பா?

அதிமுக கவுன்சிலர் வார்டுகள் புறக்கணிப்பா?

கு.அசோக்,

தக்கோலம் பேரூராட்சியில் அதிமுக வார்டுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

  இராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் மன்ற தலைவர் திமுகவை சேர்ந்த நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

  கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் லாவண்யா பேசுகையில் , 5வது வார்டுக்கு உட்பட்ட எல்லா தெருவிலும் சாலைகள் சரியில்லை. குப்பைகள் வாருவதில்லை.  விழா காலங்களில் மட்டுமே குப்பைகள் மற்றும் கால்வாய்களை சுத்தம் செய்கின்றனர்.  என்னுடைய வார்டு மட்டும் இன்றி அதிமுக கவுன்சிலர்களுக்கு உட்பட்ட வார்டுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்றார்.

 அதற்கு பதில் அளித்து பேரூராட்சி தலைவர் நாகராஜன் பேசுகையில்,  கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடக்கிறது.  அதிமுக வார்டில் எவ்வளவு பணிகள் இதுவரை நடைபெற்றுள்ளது என்ற விவரம் செயல் அலுவலர் மூலமாக அதிமுக கவுன்சிலர்களுக்கு புள்ளி விவரங்கள் வழங்கப்படும் என்றார்.

 இதைத் தொடர்ந்து அதிமுக வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.