ஓடோடி வந்து உதவி செய்த அமைச்சர் காந்தி!

கு.அசோக்,
மயான கொள்ளை திருவிழாவில் கலந்து கொண்டு பாலாற்றுக்கு சென்று திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.
குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஜவுளி வியாபாரத்திற்கு வைத்திருந்த சுமார் 2 லட்சம் மதிப்பிலான துணிகள் கருகி நாசம் - நேரில் சென்று ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கிய அமைச்சர் .காந்தி உடனடியாக வீடு கட்டி தர அதிகாரிகளுக்கு உத்தரவு.
இராணிப்பேட்டை மாவட்டம், அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் மஞ்சுளா என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் ஜவுளி வியாபாரத்திற்கு வைத்திருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், வியாபாரம் செய்து வைத்திருந்த பணம் ரூ.2 லட்சம், மற்றும் 8 சவரன் நகைகள் தீயில் கருகி சேதமானது.
இராணிப்பேட்டை நகரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மஞ்சுளா. தனது இரு மகள்களுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். ஜவுளி துணிகளை மொத்தமாக வாங்கி வந்து சில்லறை வியாபாரம் செய்து வந்த நிலையில், நேற்று இரவு மயான கொள்ளை திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பாலாறு வரை சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது குடிசை வீடு முழுவதுமாக தீப்பற்றி எரிந்ததோடு, ஜவுளி வியாபாரத்திற்கு வைத்திருந்த துணிகள், வியாபாரம் செய்து வைத்திருந்த பணம் ரூ.2 லட்சம், மற்றும் 8 சவரன் நகைகள் தீயில் கருகி சேதமானது.
இது குறித்து தகவல் அறிந்த கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கியதோடு, உடனடியாக பட்டா வழங்கி கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு கட்டித் தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்'