திருமண ஆசை....காலம் தாழ்த்திய போலீசார்!

ஜி.கே.சேகரன்,
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 5 வருடங்கள் காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட ராணுவ வீரர். மனவிரக்தியில் காதலி தூக்கிட்டு தற்கொலை. ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா!
வேலூர் மாவட்டம் நஞ்சிகொண்டாபுரம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் (31) என்பவரும் பக்கத்து கிராமமான வேடைக்கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்த அன்பரசி (28) எனற பெண்ணும் ஐந்து வருடமாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராணுவ வீரர் பிரபாகரன் 15- நாட்களுக்கு முன்பு அவரது அக்கா மகளை ரகைய திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனால் விரக்தியடைந்த அன்பரசி நேற்று மதியம் அவர்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
5- வருடங்களாக காதலித்துவிட்டு வேறுப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட ராணுவ வீரர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யக்கோரி வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அப்போது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், புகாரின் பெயரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் போலீஸ் காலம் தாமதம் செய்தது என்று பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.