பெண்ணை கொலை செய்து நிர்வாணப் படுத்தியது யார்! போலீசார் விசாரணை!

க.பாலகுரு,
வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை. தாலுகா காவல்துறையினர் விசாரணை.
திருவாரூர் அருகே இளவன்கார்க்குடி, ராஜகுரு நகர் பகுதியை சேர்ந்தவர் நாகநாதன். இவர் புருனே நாட்டில் கட்டுமான பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து விட்ட நிலையில், தற்போது பிரபாவதி (வயது40) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
தற்போது நாகநாதன் வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில், அவரது மனைவி பிரபாவதி வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் அவர் வளர்த்த ஆடுகள் சத்தம் போட்டதன் காரணமாக அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் வீட்டைத் திறந்து பார்த்தபோது பிரபாவதி கழுத்து அறுபட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இது குறித்து தாலுகா காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், காவல்துறையினர் அங்கு வந்து, உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கழுத்த மற்றும் தலையில் கத்தியால் குத்தி கொலை செய்து நிர்வாணப்படுத்தி விட்டு தலையணை மற்றும் போர்வையால் மூடி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து தடயவியல் நிபுணர் மற்றும் மோப்பநாய் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டால் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.