ஊரின் போர்டு ரொம்ப பழசு...ஆனால் 7.12.கோடியில் புது சாலை! விளங்கிடும்!

ஊரின் போர்டு ரொம்ப பழசு...ஆனால் 7.12.கோடியில் புது சாலை! விளங்கிடும்!

ஜி.கே.சேகரன்,

ரூ7.12 கோடி மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணியினை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்  பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியிலிருந்து செல்லரப்பட்டி வரை தினந்தோறும் எலவம்பட்டி, குனிச்சி,ஆதியூர் பகுதியை சேர்ந்த பள்ளி,கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என 15 லட்சம் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

 ஆனால் அதற்கேற்ற போதுமான சாலைவசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர்.இதனை தொடர்ந்து சாலைஅமைத்து தரக்கோரி அப்பகுதிமக்கள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி இடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

 இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆதியூர் பகுதியிலிருந்து செல்லரப்பட்டி வரை 2023- 24 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கிழ் ரூபாய் 7.12 கோடி மதிப்பில் சுமார் 6.100 கிலோமீட்டர் தொலைவில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை திருவண்ணாமலை நாடாளு மன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தனர்.

 எம்.பி, எம்.எல்.ஏ., சார்ஸ் ப்ளிஸ் அந்த ஊரின் போர்டை கொஞ்சம் புதுசா வையுங்களேன்.