அய்யோ அம்மா குத்துறாங்களே! உதைப்பட்ட இ.பி.எஸ்.கோஷ்டி! அதிமுக அலுவலகத்தில் களேபரம்!!

ம.பா.கெஜராஜ்,
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. 2 பேரும் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு இன்று பொதுக்குழு தீர்மானத்தை இறுதி செய்யும் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அதன் உறுப்பினர்கள் தலைமை கழகத்துக்கு வந்தனர். அப்போது திடீரென ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
அவர் வந்தபோது அங்கு திரண்டு இருந்த அவரது ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ். வாழ்க, நிரந்தரமான ஒருங்கிணைப்பாளர் வாழ்க என கோஷங்கள் எழுப்பி உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அங்கு வந்தார். அவரை பார்த்ததும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், அ.தி.மு.க. மகளிர் அணியினர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
கட்சி அலுவலகத்தில் முதல் தளத்தில் தீர்மானக்குழு கூட்டமும், கீழ் தளத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டமும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. ஜெயக்குமார் படிக்கட்டு வழியாக மாடிக்கு செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது திடீரென அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த சமயம் தொண்டர் ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால் அவரை அங்கு திரண்டு இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கும்மாங்குத்து குத்தினார்கள்.
குத்து வாங்கிய பார்ட்டி அய்யோ அம்மா குத்துறாங்களே என்று அலறியடித்து ஓடினார்.
இந்த பிரச்சனையில் சில பத்திரிகையாளர்களும் கீழே விழுந்தனர். அப்போது ஜெயக்குமார் ஆதரவாளர்கள் கட்சி வளாகத்துக்குள் கூடி நின்று கோஷமிட்டனர்.
இந்நிலையில் கட்சி அலுவலகத்துக்குள் நின்று கொண்டிருந்த ஒரு தொண்டர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அவரை சுற்றி வளைத்து தாக்கினார்கள். இதில் அவரது வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. ரத்த காயத்துடன் அவர் கட்சி அலுவலகத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். விசாரணையில் தாக்கப்பட்ட தொண்டர் பெயர் மாரிமுத்து என்பதும், பெரம்பூர் முன்னாள் பகுதி செயலாளர் என்பதும் தெரிய வந்தது.
அவர் தனது கருத்தை செல்ல வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் டென்ஷனாக காணப்பட்டது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், ஒற்றை தலைமை தேவையில்லை என ஓபிஎஸ் தனது கருத்தை சமீபத்தில் பேட்டி மூலம் வெளிப்படுத்தினார்.
ஆனால் மறு முனையில் எடப்பாடி பழனிசாமி இதுவரை வாயைத்திறக்கவில்லை.
அப்படியிருக்க இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் தனியாக ஆலோசனை நடத்தினார். இதனால் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இது ஒருபுறமிருக்க அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து தீர்மானக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
தீர்மான குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், தீர்மானக் குழு கூட்டத்திற்கு வந்த அவர், கூட்டத்தில் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணிக்கு சென்னை வந்தார். அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், காமராஜ், கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர், மா.பா.பாண்டியராஜன்,செல்லூர் ராஜூ, முக்கூர் சுப்பிரமணியம் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை. சென்னை மாவட்ட செயலாளர்களான பாலகங்கா, ஆர்.எஸ்.ராஜேஷ், விருகை ரவி, வெங்கடேஷ்பாபு, தி.நகர் சத்யா உள்ளிட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நள்ளிரவு 11 மணி வரை இந்த கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அப்படியிருக்க ஓ.பன்னீர் செல்வம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை இன்று சந்திக்க முடிவு செய்து, சென்னை உள்பட அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் முன் வராததால் தனது வீட்டிலேயே நடத்த முடிவு செய்தார்.
அதன்படி அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று 5-வது நாளாக ஆலோசனை கூட்டம் நடந்தது. அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் அசோக், தேனி சையதுகான், ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. பாலகங்கா ரவி உள்ளிட்ட முக்கியமானவர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள 9 மாவட்ட செயலாளர்களில் ஒருவர் மட்டுமே கலந்து கொண்டார். மற்ற 8 பேர் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
அப்படியிருக்க பொதுக்குழுவில் எந்த தீர்மானம் கொண்டு வந்தாலும் அதில் இருவரும் கையெழுத்திட்டால்தான் நிறைவேற்ற முடியும். அதனால் இந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமையை கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல் ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
எது எப்படியாக இருந்தாலும் எடப்பாடியின் ஒற்றை தல்லைமை பற்றிய பிளான் என்னவென்று லீக் ஆகாததால்......